• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க அறைகூவல்.!

Mathavi by Mathavi
January 29, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஸ்ரீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க அறைகூவல்.!
Share on FacebookShare on Twitter

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4ம் திகதியினை ஸ்ரீலங்கா தேசம் தமது சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றது. ஆயினும் அன்றைய தினமே பறிக்கப்பட்ட தமிழர் தேசத்தின் இறையாண்மை, ஆங்கிலேயரிடமிருந்து சிங்கள பேரினவாதிகளுக்கு கைமாற்றப்பட்ட தினமாகும். வரலாற்று ரீதியாக இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள் ஒன்றிணைந்த பகுதிகள், இத்தீவின் மூத்த குடிகளான தமிழ் மக்களின் தாயக பூமியாக இருந்தது என்பதையும், அந்த தாயகபூமி இறையாண்மை உள்ள தனித்தேசமாக இருந்தது என்ற வரலாற்று உண்மையை மறுதலித்து எமது சுதந்திரம் சிங்கள தேசத்திடம் கையகப்படுத்தப்பட்ட நாளாகவே இந்நாள் உள்ளது.

இன்று தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் ஆட்சி ஏறி உள்ள ஜனதா விமுத்தி பெரமுன (JVP) எனும் சிங்கள அடிப்படைவாத கட்சி தம்மை மாற்றத்தின் நாயகர்களாக காட்ட முற்பட்டாலும் அவர்களின் உண்மை முகம் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றது.

என்றுமில்லாதவாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி ஏறியவர்கள் இலங்கை தீவின் அதி உச்ச பிரச்சனையான தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக எவ்வித அக்கறைகளுமின்றி, ஏன் அவ்வாறான ஒரு பிரச்சனையே இல்லை என்ற கோதாவிலேயே நடந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அத்துடன் சிங்கள பேரினவாதத்தால் இனத்தின் மீதான இனவழிப்பினை மறுதலித்து, அலட்சியத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டதாக கூறுகின்றனர். அரசியல் கைதிகள் யாரும் இல்லை என முன்னைய அரசாங்கங்களைப் போலவே தமிழ் மக்களின் போராட்டத்தினை பயங்கரவாதமாகவே சித்தரிக்க முயல்கின்றனர்.

சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும், சிங்கள பேரினவாத மூலோபாயம் மாறாது என்பதே நாம் கண்ட அனுபவ பாடம். அதைவிடுத்து இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என நம்புவோமேயானால் எம்மை போன்ற அரசியல் அறிவிலிகள் யாரும் இருக்க முடியாது. மேலும், இந்த அரசானது இலங்கையர் எனும் அடையாளத்தின் கீழ் தமிழ் மக்களின் தனித்துவத்தை அழித்து சிங்கள மேலாண்மையை நிறுவுவதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மேற்கூறிய விடயங்களை கருத்தில் கொண்டு வரும் ஸ்ரீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை தொடர்ச்சியாக தமிழர் தேசம் கரிநாளாக அனுசரித்தது போலவே இம்முறையும் அனுசரிக்க அறைகூவல் விடுக்கின்றோம். சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாக கருத்தில் கொண்டு பொதுவிடங்கள், கடைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகள், வணக்கத்தலங்கள், எமது வீடுகள் என்பவற்றில் கறுப்பு கொடிகளை கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நாளில் உங்களின் உரிமை குரலுடன் சிங்கள அரசுக்கெதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழர் தேசம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இறையாண்மை உள்ள தனித்தேசமாக மலரும் நாளே தமிழினத்தின் சுதந்திர நாள் என்பதனை மனதில் கொண்டு விடுதலைக்காய் போராட அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

அருட்பணி. து. ஜோசப்மேரி தலைவர்

தவத்திரு வேலன் சுவாமிகள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

Mathavi

Mathavi

Related Posts

நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!

நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!

by Thamil
May 28, 2025
0

2788 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு...

இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு..!

இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு..!

by Thamil
May 28, 2025
0

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ESDS மூலம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட, முற்றிலும் இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு இன்று இடம்பெற்றது. திஹாறிய அல்...

நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்..!

நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்..!

by Thamil
May 28, 2025
0

நீர்கொழும்பு - தலாதுவ பகுதியில் இன்று (28) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நபர்களுக்கு...

தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

by Thamil
May 28, 2025
0

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கில் இன்று (28) புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில்...

தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

by Thamil
May 28, 2025
0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக இம்முறை நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பூர் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரத்தினம்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு..!

முல்லைத்தீவில் இடம்பெற்ற இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு..!

by Thamil
May 28, 2025
0

"எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்ய மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் உதவிக்காக இந்தியாவை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும்,...

கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

by Thamil
May 28, 2025
0

யாழ்.வடமராட்சிக் கிழக்கு - கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. முன்பள்ளியில் மு.ப 10.00 மணியளவில் அவ் முன்பள்ளியின் ஆசிரியர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.மங்கள...

சுயேட்சைக் குழுத் தலைவருக்கு எதிராக சக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் கையளிப்பு..!

சுயேட்சைக் குழுத் தலைவருக்கு எதிராக சக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் கையளிப்பு..!

by Thamil
May 28, 2025
0

இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மன்னார் பிரதேச சபை தேர்தலில் மாட்டு வண்டி சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற...

மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!

மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!

by Thamil
May 28, 2025
0

யாழ் வடமராட்சிக் கிழக்கு - செம்பியன் பற்று பகுதியில் இன்றைய (28) தினம் மருதங்கேணி பொலிஸாரால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது...

Load More
Next Post
மக்களை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது.!

மக்களை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது.!

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி.!

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி.!

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி