Browsing: உலக செய்திகள்

டிஜிட்டல் மார்கெட் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மொடலான ஷாரதா என்னும் பெண், திருமணப் பெண்போல் லெஹங்கா உடை அணிந்து லண்டன் மெட்ரோவில் நடந்து திரிகிறார். சாலையில் நடந்து செல்லும் அவரை அங்குள்ளவர்கள் பார்த்து திகைக்கின்றனர். ஒரு சிலர் அவரை புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.

  2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து நாட்களுக்குள் மூன்று தடவை ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் (RAH) உதவியை நாடிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் தோற்று பரவலின் போது ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் உதவியை 23 வயதுடைய இலங்கை பிரஜையான சசிந்தா பட்டகொடகே எனும் இளைஞர் கோரியுள்ளார். குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னதாக இருமல் மற்றும் இரத்த வாந்தி எடுத்துள்ளதாக வைத்தியர்களிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டி இந்த […]

மரணம் நம்மை பிரிக்கும் வரை இணைபிரியா தம்பதிகளாக வாழ வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், முன்னாள் நெதர்லாந்து பிரதமர் ட்ரைஸ் வான் ஆக்ட் (Dries van Agt) மற்றும் அவரது மனைவி யூஜெனி (Eugenie) ஆகியோருக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக ஒன்றாக கழித்ததை போலவே ஒன்றாக இந்த வாழ்க்கையில் இருந்து விடைபெறுவது நோக்கமாக இருந்துள்ளது. இதன்படி, 93 வயதான இந்த தம்பதி இந்த மாதம் முதல் பகுதியில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இருவரும் கைகோர்த்து இறந்ததாக […]

இந்தோனேசியாவில் சனிக்கிழமை (10) நடந்த கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையே நடந்த போட்டியில் போட்டியிட்டுள்ளார். அப்போது திடீரென மைதானத்தின் நடுவில் நின்ற அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் ரிக்டர் 5.7 அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அந்தப் பகுதியில் நன்கு உணரப்பட்டுள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியதாக நிலையில், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அவரது தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேட்டலின் நோவக் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘நான் தவறு செய்துவிட்டேன். அதனால்தான் ஜனாதிபதியாக இதுவே எனது கடைசி உரையாகும். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாததற்கு மன்னிக்கவும். “சிறு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பில் நான் […]

மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கு இராணுவ சேவையை கட்டாயமாக்குவதாக அந்நாட்டு இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட பெண்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் கடமையாற்ற வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் மியன்மார் இராணுவம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. போராளிகள் அமைப்பு மற்றும் இராணுவ விரோத போாளிகளுடன் கடந்த சில மாதங்களாக […]

காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேலிய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹாமல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா நகரின் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக ஏற்கனவே 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் புதல்வரான 22 வயதான ஹசெம் ஹனியே என்பவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தின் […]

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் சிறையில் இருக்க வேண்டியுள்ளது. இம்ரான் கானைத் தவிர, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் 13 குற்றச்சாட்டுகளில் பிணை பெற்றுள்ளார், ஆனால் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ரஷ்ய “பொது போக்குவரத்துக் கப்பல்கள்” மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் முயற்சியை முறியடித்ததாக ரஷ்யா அறிவித்துளளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் “அரை நீரில் மூழ்கக்கூடிய கடற்படை ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய சிவிலியன் போக்குவரத்துக் கப்பல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்” என்று அழைக்கப்படும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியது. ரஷ்ய ரோந்துப் படகுகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலைத் தடுத்ததாகவும், ஒரு உக்ரேனிய கடற்படை ஆளில்லா விமானத்தை பீரங்கித் தாக்குதலால் அழித்ததாகவும், மீதமுள்ளவற்றை மின்னணுப் […]