உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

கொக்கலை மற்றும் செம்மணி அகழ்வாராய்ச்சிகளுக்கு சர்வதேச நிதி உதவி கோர வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
51 பார்வைகள்

கொக்கலை மற்றும் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், நிதி பற்றாக்குறை நிலவினால் சர்வதேச நாடுகளின் உதவியைப் பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொக்கலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடு தொகுதிகளில், பல மண்டையோடுகள் வாய்கள் திறந்த நிலையில் காணப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

மனித உடல் உணர்வோடு இருக்கும் போதோ, உயிருடனோ அல்லது உயிருக்குப் போராடும் நிலையிலோ தாக்கப்படும் போது மட்டுமே இதுபோன்ற அமைப்பில் எலும்புக்கூடுகள் அமையக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்த முறையான அறிவியல் பூர்வ நுண் ஆய்வுகள் இதுவரை முழுமையாகச் செய்யப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

செம்மணி சிந்துபாத்தி மயானப் பகுதியில் மூன்றாம் கட்டமாக 111 நாட்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற முடிவுகளுக்கமைய அடுத்தகட்ட ஆய்வுகளை நடத்த நிதி பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நிதி ஒதுக்கீடுகளில் அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டில் நிதி பற்றாக்குறை இருப்பின், இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் நிதியுதவியைக் கோர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் நேரடியாக முன்வந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி, அங்கு மறைந்துள்ள உண்மைகளைக் கண்டறிய உதவ வேண்டும் என அவையின் ஊடாகக் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

18 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

53 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி விடுவிப்புப் போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி வடக்கில்…

60 0 0
இலங்கை செய்திகள்

AI ஐ அதிகாரிகளுக்கு மாற்றீடாக அன்றி அவர்களின் வினைத்திறனை அதிகரிக்க பயன்படுத்த வேண்டும்!

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும்…

42 0 0