உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்!

உலக செய்திகள் 12 மணி நேரம் முன்
93 பார்வைகள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மருத்துவப் பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது.

சிறைவாசத்தின் போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகக் கூறி வந்த ஆதரவாளர்களின் நீண்டகாலக் கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் இந்த வார உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இம்ரான் கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து முரண்பாட்டில் இருந்து வரும் அவரது கட்சிக்கும், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பிற்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு சாத்தியமான முதல் படியாக இது கருதப்படுகிறது.

சிறைவசத்தின் போது, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், வலது கண்ணில் கணிசமான அளவு பார்வையை இழந்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

ஆனால், உடனடி சிகிச்சை தேவைப்படும் வகையிலான எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாக அரசு கூறியுள்ளது.

73 வயதான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரை 48 மணி நேரத்திற்குள் தலைநகரில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றவும், அவரது தனிப்பட்ட மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழுவின் சிகிச்சையைப் பெற அவரை அனுமதிக்கவும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்ததிலிருந்து, அரசுப் பரிசுகள் மற்றும் சட்டவிரோதத் திருமணம் தொடர்பான வழக்குகள் உட்படப் பல வழக்குகளை கான் எதிர்கொண்டு வருகிறார்.

சில வழக்குகளில் அளிக்கப்பட்ட தண்டனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன அல்லது இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.

எனினும் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ (El Niño) காரணமாகப் பொழிந்த குறைந்த மழையின் விளைவாக, பனாமா கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனம் அக்குறிப்பிடப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக்…

66 0 0
உலக செய்திகள்

10 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளதை அடுத்து,…

62 0 0
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள்…

55 0 0
உலக செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதாரப் போர் தொடுப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்தும், ஐக்கிய அரபு…

78 0 0