உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
41 பார்வைகள்

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரதோட்ட பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு சந்தேகநபர்கள் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2026 ஜூலை 16ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹோமாகம பிராந்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளின் போது கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில், நேற்று மாலை இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் எனவும், மற்றையவர் குற்றச்செயலுக்கு உடந்தையாக செயல்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பியகம பொலிஸ் பிரிவின் தெல்கொட பகுதியிலும், நவகமுவ பொலிஸ் பிரிவின் வந்தூரமுல்ல பகுதியிலும் வைத்து இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் ரணால மற்றும் பல்லம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹோமாகம பிராந்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0