உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

நகைச்சுவை வழங்கும் தரப்பாக மாறிவிட்டனர் எதிர்க்கட்சியினர்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
34 பார்வைகள்

எதிர்க்கட்சியினர் தற்போது நகைச்சுவை வழங்கும் தரப்பாக மாறிவிட்டனர் என்றும், நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கூட வெறும் நகைச்சுவை விடயங்களாக மாற்றியுள்ளனர் என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விடுத்து வரும் கருத்துக்கள் குறித்து ஊடகங்களுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது,
“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு நீதி அமைச்சர் பொறுப்பேற்றுள்ளமைதுடன், அது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், அந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறியுமாறு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதற்குப் பதிலாக வெறும் பிரேரணைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர்.

இதற்கு முன்னரும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்போவதாகக் கூறிவிட்டு, கடைசி வரை அதைச் சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறே தற்போதைய பிரேரணையும் வெறும் பேச்சுடன் முடிந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது. எதிர்க்கட்சித் தரப்புக்கே தமது கட்சியின் மீதான நம்பிக்கை குறைந்துள்ள ஒரு சூழலே இன்று உருவாகியுள்ளது.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0