வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல கிராம பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் CCTV காணொளிக் காட்சிகளில், அடையாளம் தெரியாத ஒருவர் வீடொன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காணொளியில் பதிவாகியுள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அல்லது அவரை அடையாளம் காண முடிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சந்தேக நபரை அடையாளம் காணும் அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடன் தகவல் வழங்குமாறு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.










