• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

Mathavi by Mathavi
June 7, 2026
in இலங்கை செய்திகள்.
0
2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!
Share on FacebookShare on Twitter

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர், 2028ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பாரிய கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற, இலங்கை அமரபுர அரியவம்ச சத்தம்ம யுத்திக பிரிவின் மகா நாயகர் பதவிக்கான சன்னஸ் பத்திரமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாட்டின் வறுமை மட்டம் 30% ஆகவும், சிறார்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு 20% ஆகவும் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

2027 மார்ச் மாதத்துடன் இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு முடிவுக்கு வருகின்றது. அதன்பின்னர், நாட்டுக்குக் கிடைக்கும் விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்படும். 2028 ஜனவரி முதல் 2.5 பில்லியன் முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வெளிநாட்டுக் கடன்களை நாடு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும் ஆபத்தான பொருளாதாரப் புதைகுழியில் வீழும். எனவே, அத்தகைய இக்கட்டான சூழ்நிலை உருவாவதற்கு முன்பே, அதனைத் தவிர்ப்பதற்கான தகுந்த கொள்கை ரீதியான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும்.

அன்று நம் நாடு நேரடி ஏகாதிபத்திய காலனித்துவத்திற்கு உட்பட்டது. இன்று அதற்குப் பதிலாக மறைமுக ஏகாதிபத்தியம் உலக அரசியலில் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசமைப்பின்படி நாம் இறையாண்மையுள்ள நாடாக இருந்தாலும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் உலகின் பல்வேறு தரப்புகளுடன் நாம் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களில் 90% இற்கும் அதிகமானவை, நமது நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய நிபந்தனைகளை மீறியே நடைபெறுகின்றன. நமது நாடு இன்று பூகோள அரசியலின் ஆடுகளமாக மாறியுள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் வேலையிழப்புகள் அதிகரித்து, பல துறைகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இந்த ஆபத்தான சவால்களை எதிர்கொள்ள நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டைப் பாதுகாக்கும் பொதுவான வேலைத்திட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அன்று நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டபோது, மகா சங்கத்தினர் மன்னர்களுடன் கைகோர்த்துத் தேசத்தைக் காப்பாற்றினர். அதேபோன்றதொரு வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் தற்போதைய மறைமுக ஏகாதிபத்திய சவால்களை வெல்லவும் மகா சங்கத்தினர் வழங்க வேண்டும். பொறுப்பான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் நாட்டு நலனுக்கே முன்னுரிமை அளிக்கும்.” – என்றார்.

Related Posts

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

by Mathavi
June 7, 2026
0

மலையகத்தில் காணப்படும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதன் ஊடாக உயிர் ஆபத்துகளையும், பொருள் சேதங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும்,...

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி, வளலாய் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர்...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 7, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு...

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

by Mathavi
June 7, 2026
0

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்குப் பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய தாய்...

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

by Mathavi
June 7, 2026
0

தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பொருளாதார வெற்றியை, அந்தந்த நாட்டு அரசுகளால் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தின் தொழில்முனைவோர், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள்...

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில்...

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட...

அமெரிக்காவுடன் உடனே ஒப்பந்தம் செய்யுங்கள்.!

அமெரிக்காவுடன் உடனே ஒப்பந்தம் செய்யுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி