• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 5, 6 ஆவது மீளாய்வுகளுக்கு அங்கீகாரம்.!

Mathavi by Mathavi
May 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 5, 6 ஆவது மீளாய்வுகளுக்கு அங்கீகாரம்.!
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளுக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நேற்று வியாழக்கிழமை தனது உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித்தொகை கிடைக்கப்பெறவுள்ளதுடன், இந்நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தக் கடன் தொகை 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இந்நீடிக்கப்பட்ட நிதி வசதியுடன் தொடர்புடைய சில முக்கிய அளவுகோல்களை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள், இறக்குமதி வரம்புகளைக் கடுமையாக்குதல் அல்லது புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்காதிருத்தல் போன்ற தொடர்ச்சியான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, எரிபொருள், மின்சாரம், உர மானியம் மற்றும் ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றை வெளியிடுவதற்கும், அவை ஒட்டுமொத்தமாக 100 பில்லியன் ரூபா எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் முன் நிபந்தனையாகக் கோரப்பட்டிருந்தது. எனினும், செப்டெம்பர் மாத இறுதிக்குள் இந்த அளவுகோல்களைச் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சில்லறை எரிபொருள் விலைகளை அவற்றின் செலவு – மீட்பு மட்டங்களுக்குக் கொண்டு செல்வது மற்றும் மாதாந்த விலைச்சூத்திரத்துக்கு அமைவாகக் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதிலும் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன. இந்த நிபந்தனையானது 2025 டிசம்பர் மற்றும் 2026 ஏப்ரல் ஆகிய மாதங்களில் மீறப்பட்டுள்ளதுடன், 2026 ஜனவரியில் மாத்திரமே இந்நிபந்தனைக்கு இணங்க இலங்கை செயற்பட்டுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இவ்வேலைத்திட்டத்தின் சில அடிப்படை இலக்குகளிலிருந்து இலங்கை விலகியுள்ளது. இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் வரை மந்தமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” – என்றார்.

பொது நிதி மற்றும் முதலீட்டு மேலாண்மைத் துறை மற்றும் மின்சாரத் துறை மறுசீரமைப்புகளை முழுமையாக நிறைவு செய்ய இலங்கை அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், கடன் மறுசீரமைப்பு நிலைத்தன்மையில் அதிக ஆபத்து காணப்படுவதாகவும், பணவியல் கொள்கையூடாக விலை ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துக்கு விசேட விளக்கக் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எரிசக்தி விலைகளை மறுசீரமைக்கும் அதேவேளையில், அதன் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைத்து வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்காகத் தற்காலிக மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அந்த உதவிப் பொதியில் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்கள், சிறு விவசாயிகளுக்கான உர மானியங்கள், மீனவர்களுக்கான உதவிகள் மற்றும் அஸ்வெசும நிதிப் பரிமாற்ற வேலைத்திட்டத்துக்கான கூடுதல் நிதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. மேலும், சமீபத்தில் திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் ரூபா நிதி மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்ற சம்பவத்தின் காரணமாகவே, வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள் தொடர்பான அளவுகோலைச் செயற்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பப்பகியோர்கியோ, “இலங்கை புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதிலிருந்தும், அதிக வரிகளை விதிப்பதிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். குறிப்பாக வாகன இறக்குமதியில் இது அவசியமானதாகும்.” – என்றார்.

வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மீது வரிகளை அதிகரிப்பது நீண்ட கால அடிப்படையில் வெற்றிகரமான அணுகுமுறையாக அமையாது என்றும் அவர் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், இலங்கை அரசு தனது 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று பாராட்டியுள்ள அவர், வாகன இறக்குமதி மூலம் கிடைத்த எதிர்பாராத வரி வருவாயானது, அரசின் ஒட்டுமொத்த வருவாய் ஈட்டலை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் சீர்திருத்தச் செயல்முறைகள் சரியான பாதையில் வலுவாக முன்னோக்கி நகர்கின்றன. ‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட சவால்களுக்கு வெற்றிகரமாகப் பதிலளிப்பதற்கான நிதியியல் வெளியை இந்தப் பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.” – என்றும் அரசின் முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகத் தற்பொழுது எண்ணெய் விலை உயர்வடைந்து, அதன் விளைவாக இலங்கையின் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும், சுற்றுலா வருவாய் வீழ்ச்சியடைவதால் நடப்புக் கணக்கு பலவீனமடையக் கூடும் என்றும், இதனால் நாட்டின் பொருளாதாரப் பார்வைக்குக் கடுமையான கீழ்நோக்கிய அபாயங்கள் எழுந்துள்ளன என்றும் எச்சரித்துள்ள அவர், இவ்வருடத்தில் பணவீக்கம் 5 வீத மட்டத்தில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

by selvan
May 29, 2026
0

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது...

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

by selvan
May 29, 2026
0

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் பிரதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்குமாறு உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் பிரதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்குமாறு உத்தரவு!

by selvan
May 29, 2026
0

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி கொடுக்கல் - வாங்கல் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதான விசாரணைகளை...

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு!

by selvan
May 29, 2026
0

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துமாரு குற்றப்...

2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு!

2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு!

by selvan
May 29, 2026
0

2018-ல் இருந்து 2022 வரையான காலப்பகுதிக்குள் தேரர்கள் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இந்த வழக்குகள்...

வலிகாமம் வடக்கில் கறுப்புக்கொடிகளுடன் மக்கள் போராட்டம்!

வலிகாமம் வடக்கில் கறுப்புக்கொடிகளுடன் மக்கள் போராட்டம்!

by Mathavi
May 29, 2026
0

யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் இன்னும் விடுவிக்கப்படாது உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ"...

இலங்கை மிக நம்பகமான நாடு; முதலீடு செய்ய முன்வாருங்கள்.!

இலங்கை மிக நம்பகமான நாடு; முதலீடு செய்ய முன்வாருங்கள்.!

by Mathavi
May 29, 2026
0

"இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு திறந்த, அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும்" என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் விரைவாக விசாரிக்கப்படும்.!

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் விரைவாக விசாரிக்கப்படும்.!

by Mathavi
May 29, 2026
0

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு.!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு.!

by Mathavi
May 29, 2026
0

மட்டக்களப்பு கரடியனாறு - தும்பாஞ்சோலை பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ்...

வயலுக்குள் குடைசாய்ந்த முச்சக்கரவண்டி; பெண் ஒருவர் உயிரிழப்பு.!

வயலுக்குள் குடைசாய்ந்த முச்சக்கரவண்டி; பெண் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 29, 2026
0

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ஆம் கட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) முச்சக்கரவண்டி ஒன்று வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி