இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிகாரிகள் போதிய அழுத்தத்தை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்புத் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரச அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டன. எனினும், இராணுவத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான வலுவான அழுத்தத்தை யாழ்ப்பாணம் மாவட்ட அதிகாரிகள் வழங்கவில்லை. இராணுவத்தினர் கூறுவதைக் கேட்கும் நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணி விடுவிப்பு நடவடிக்கை நேற்று வெற்றியளிக்காமைக்கு அரச அதிகாரிகளின் மந்தமான செயற்பாடே காரணம் என்று கூறப்படுகின்றது.
ஒப்பீட்டளவில் ஏனைய மாவட்டங்களின் அரச அதிகாரிகள் முழுமையான தரவுகளுடன் வலுவான கோரிக்கைகளை இராணுவத்திடம் முன்வைத்து தமக்கான தீர்வைப் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts
அனுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்ப்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!
கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடற்ப்பரப்பில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் இன்று புங்குடுதீவு...
யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீர் மரணம்!
யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது. கச்சேரியடி, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற...
மட்டக்களப்பில் தீ விபத்து – இரு குழந்தைகள் பலி!
மட்டக்களப்பில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று வயது நிரம்பிய...
கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று காலை சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமது வாழ்வாதரம் பாதிக்கும் வகையில் கொடிகாமம்...
பொலீசாரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில்...
அம்பாறையில் பெண்கள் சந்தை மற்றும் உணவகங்களில் சோதனை
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இன்று...
ஹட்டனில் இருந்து கொழும்புக்கு தனியாக செல்ல எத்தனித்த 7 வயது சிறுவன் மீட்பு
பெற்றோரை சந்திப்பதற்காக ஹட்டனில் இருந்து தனியாக கொழும்பு செல்ல முற்பட்ட 7 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் இலங்கை போக்குவரத்து...
ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்தமைக்குக் கண்டனம்!
ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமையானது ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகும் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது வவுனியா மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வரும்...
வீதி விதிமுறைகளை மீறிய 40 ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றல்!
கிளிநொச்சியில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத 40க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த வாகனங்கள் கைப்பற்றப் பட்டதாக...










