மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்று (20) காலை 9.30 மணியளவில் அழகுக்கலை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
ரூபி அழகுக்கலை அக்கடமியின் ஏற்பாட்டில் அதன் நிறுவனர் ரூபி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ரூபி அழகுக்கலை நிலையத்தில் ஓராண்டு கால அழகுக்கலைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் முகமாகவும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான மணமகள் அலங்கார கண்காட்சியாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஸ்டான்லி டி மெல் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மணமகள் அலங்கார போட்டிகளில் பங்குபற்றி மிகச் சிறப்பான முறையில் அழகுக்கலை ஒப்பனைகளை மேற்கொண்ட வெற்றியாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






















