வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை (24) காலை 9 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான திரு. இளங்குமரன் தலைமையில் ஆரம்பமாகி பிரதேச அபிவிருத்தி சார்ந்த பல விடயங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டு தற்போது கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் வடமராட்சி கிழக்கில் இருந்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



