ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கெரோலினா தோட்ட பகுதியில் இன்று (11) காலை ஒரு குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி உயரமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளே இந்த விபத்தில் சிக்கினர்.
எதிர்த் திசையில் பயணித்த பேரூந்துக்கு வழிவிட முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்துள்ளது.
காரில் இருந்த மூன்று பேர் காயமடைந்து வட்டவளை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் இரண்டு குழந்தைகளும் காயமின்றி உயிர் பிழைத்தனர்.