இலங்கை தமிழரசுக் கட்சியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ் சுன்னாகத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் உள்ளூராட்சி அதிகாரி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவேட்டிய வேட்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று சுன்னாகத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி கிளையின் தலைவரும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளருமாகிய தியாகராஜா பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 18 வட்டாரங்களில் 13 வட்டாரங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி தனதாக்கி கொண்டது.
வலிகாமம் தெற்கு 31 உறுப்பினர்களை கொண்டது. இப் பிரதேச சபையின் இலங்கை தமிழரசு கட்சி – 13 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 06 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 06 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி – 05. ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜஎனநாயகக் கட்சி – 01 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.





