• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு புதிய அரசு நீதியை வழங்க வேண்டும்.!

Mathavi by Mathavi
June 1, 2025
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு புதிய அரசு நீதியை வழங்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வரவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் 31.05.2025 நேற்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர், தமது தொடர் போராட்டத்தின் 3007ஆவது நாளில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். இவ்வார்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கலந்துகொண்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் அரசாங்கம் கவனயீனமாகச் செயற்படுகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு இராணுவத்திடம் கையளித்த உறவுகளை, மீளக் கையளிக்குமாறு அவர்களின் உறவுகள் தொடர்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக எமது உறவுகள் வட்டுவாகல் பகுதியிலும் கைது செய்யப்பட்டார்கள், முகாம்களிலும் கைது செய்யப்பட்டார்கள், கடலிலும் கைது செய்யப்பட்டனர், வெள்ளைவானில் கடத்தப்பட்டனர் இவ்வாறாக பலவழிகளிலும் எமது உறவுகளுக்கு கடந்தகால இனவாத அரசுகள் துன்பங்களை விளைவித்தன.

இவ்வாறு கையளிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீளக்கையளிக்குமாறு கோரும் அவர்களது உறவுகளை அரசாங்கங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. இந்த நிலை மாறவேண்டும்.

கடந்தகால இனவாத அரசாங்கங்கள்தான் இவ்வாறு ஏமாற்றினார்களெனப் பார்த்தால் தற்போது ஆட்சிப்பொறுப்பிலுள்ள அரசாங்கம் கூட இதுதொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

குறிப்பாக ஏற்கனவே தேர்தல் காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு வழங்கப்படுமென இந்த அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயககவை சந்தித்தபோதுகூட காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி வழங்கப்படவேண்டுமென கோரிக்கை முன்வைத்தோம். இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில் இங்கு இனப்படு கொலையே இடம்பெறவில்லையெனவும், அவ்வாறு இனப்படுகொலை இடம்பெற்றமைக்கு ஆதாரங்கள் எவையுமில்லையெனவும் அமைச்சர்களே சொல்லுமளவிற்கு நிலைமைகளைக் காணக்கூடியவாறிருகின்றது.

குண்டுகள் போட்டு அழித்து, அந்த அழிவுகளிலிருந்து மீண்ட எமது மக்கள், தமிழ் இனப்படுகொலை இந்த மண்ணில் இடம்பெற்றது என்பதற்குச் சாட்டசியாக இருக்கின்றனர்.

தற்போது கனடாவும் எமது மண்ணில் தமிழ் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் தமிழ் இனப்படுகொலைக்கான தீர்மானம் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அண்மையில் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மே.18 தமிழின அழிப்பு நாளில் தற்போதைய கனேடியப் பிரதமரும் இரங்கல் செய்தியொன்றையும் வெளியிட்டிருந்தார். அதேபோல் மேலுமொரு நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அமைப்பதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அறிகின்றோம். இவ்வாறாக வெளிநாடுகளே இங்கு தமிழ் இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தற்போதைய அரசாங்கமும், கடந்தகால இனவாத அரசுகளைப்போலவே தமிழ் இனப் படுகொலைச் செயற்பாட்டை மூடிமறைக்கும் வகையில் செயற்படுகின்றது.

எது எவ்வாறாயினும் எமது மண்ணில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையினை, நாம் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டேயிருப்போம். எனவே இதற்குரிய தீர்வை இந்த அரசாங்கம் தந்தேயாகவேண்டும்.

அதேவேளை சர்வதேச நாடுகளும் இந்த விடயத்தில் தலையீடு செய்து இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உரிய தீர்வைப்பெற்றுத் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக்கொண்டிருந்த வயதுமுதிர்ந்த தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் தமது உறவுகள் கிடைக்காமலேயே உயிரிழந்துள்ள அவலங்களும் இங்கே அரங்கேறியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் புதிய அரசாங்கமும் கடந்த அரசாங்கம் செயற்பட்டதைப்போன்று செயற்படாமல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான உரிய நீதியை வழங்கவேண்டும் எனத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

Related Posts

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

"யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது"என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,...

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

இளம் யுவதி வெட்டிக் கொ*லை; தென்னிலங்கையில் கொடூரம்..!

by Thamil
July 19, 2025
0

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. காணித் தகராறில் உறவினர்களுக்கிடையிலான...

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – சமந்த பதிலடி..!

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – சமந்த பதிலடி..!

by Thamil
July 19, 2025
0

"எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்"...

விமான நிலையங்களின் அருகில் பட்டம் விடுவதற்கு தடை..!

விமான நிலையங்களின் அருகில் பட்டம் விடுவதற்கு தடை..!

by Thamil
July 19, 2025
0

நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்க விடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

'உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்' என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில்...

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்..!

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்..!

by Thamil
July 19, 2025
0

"முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்" என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு நேற்றைய தினம்...

கடலில் மூழ்கிய இரு இளைஞர்கள் உயிருடன் மீட்பு..!

கடலில் மூழ்கிய இரு இளைஞர்கள் உயிருடன் மீட்பு..!

by Thamil
July 19, 2025
0

அம்பாறை, பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம்...

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை..!

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை..!

by Thamil
July 19, 2025
0

"நாட்டில் இன்று பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை" என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்....

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து..!

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

வாகன விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், திரப்பனை பகுதியில் இன்று (19) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாரவூர்தி ஒன்றுடன்...

தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி..!

தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி..!

by Thamil
July 19, 2025
0

இன்று (19) காலை யாழ்ப்பாணம் - நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது. இது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி