1919
இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பயன்பாடு மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.
1874
குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1877
உருமேனியாவின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
1877
8.8 அளவு நிலநடுக்கம் பெருவைத் தாக்கியதில், 2,541 பேர் உயிரிழந்தனர்.
1901
அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்ணில் திறந்துவைக்கப்பட்டது.
1918
முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆஸ்டெண்ட் துறைமுகத்தை பிரித்தானியா இரண்டாம் முறையாக முடக்க எடுத்த நடவடிக்கையை ஜேர்மனி தடுத்தது.
1920
போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.
1927
கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
1933
மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
1936
அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எத்தியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாட்டை இத்தாலி உருவாகியது.
1940
இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை செருமனியின் யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானிய அரச கடற்படை தாக்கிக் கைப்பற்றியது.
1942
பெரும் இன அழிப்பு: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர். பெலருசில் இருந்த நாட்சி வதைமுகாம் அழிக்கப்பட்டு, அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: இறுதி செர்மன் சரணடைவு பெர்லினில் சோவியத் தலைமையகத்தில் இடம்பெற்றது. சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
1945
இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் நிலை கொண்டிருந்த ஜேர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.
1945
இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.
1945
இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.
1945
கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
1955
பனிப்போர்: மேற்கு ஜேர்மனி நேட்டோவில் இணைந்தது.
1956
உலகின் 8ஆவது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
1969
கார்லோசு லமார்க்கா பிரேசில் இராணுவ ஆட்சியாளருக்கு எதிராகக் கரந்தடித் தாக்குதல்கலை ஆரம்பித்தார். சாவோ பாவுலோவில் இரண்டு வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன.
1977
ஆம்ஸ்டர்டம் நகரில் போலன் உணவகம் தீப்பிடித்ததில் 33 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர்.
1979
பாரசீக யூத தொழிலதிபர் அபீப் எல்கானியான் தெகுரானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானிய யூதர்கள் அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர்.
1980
புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
1985
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1987
போலந்து, வார்சாவா நகரில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 183 பேரும் உயிரிழந்தனர்.
1992
நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் சூசா நகரைக் கைப்பற்றின.
1992
கனடா, நோவா ஸ்கோசியாவில் வெசுட்ரே சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2001
கானாவில் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றில் ஏற்பட்ட சலசலப்பை அடக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.
2002
பெத்லகேமில் பலத்தீனியர்களின் பிறப்பிடத் தேவாலயத்தின் 38-நாள் முற்றுகை முடிவுக்கு வந்தது.
2012
இந்தோனேசியாவில் மேற்கு சாவகப் பகுதியில் விமானம் ஒன்று சலாக் மலையில் மோதியதில் 45 பேர் உயிரிழந்தனர்.
2018
மலேசியப் பொதுத் தேர்தல், 2018: மலேசியாவின் தேசிய முன்னணி கட்சி 1957 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாகப் பெரும் தோல்வியடைந்தது.




