பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னக்கோனை விசாரணைக் குழுவின் முன் முன்னிலையாகுமாறு முதற் தடவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பாரதூரமான வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் அவரை முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே மாதம் 19 ஆம் திகதி தேசபந்து தென்னக்கோனை முன்னிலையாகுமாறு குறித்த குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இதுவரை பல நாட்கள் கூடியிருந்ததுடன், எதிர்கால விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் தேசபந்து தென்னக்கோனை குழு முன்னிலையில் தேசபந்து தென்னக்கோனை முதல் தடவையாக அறிவித்துள்ளது.