1840
ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர்.
1895
ரஷ்சிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்சியாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1915
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 128 பேர் அமெரிக்கர் ஆவர்.
1920
போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் கம்யூனிச செஞ்சேனைப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
1920
சோவியத் ரஷ்சியா ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.
1927
நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1930
7.1 அளவு நிலநடுக்கம் வடமேற்கு ஈரானையும், தென்கிழக்கு துருக்கியையும் தாக்கியதில் 3000 பேர் வரை உயிரிழந்தனர்.
1937
எஸ்ப்பானிய உள்நாட்டுப் போர்: ஜேர்மனியின் கொண்டோர் லீஜியன் படைப்பிரிவு பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு உதவியாக எஸ்ப்பானியா வந்து சேர்ந்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: பவளக் கடல் சமரின் போது, அமெரிக்கக் கடற்படையின் வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று சோகோகோ என்ற ஜப்பானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1945
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோடில் ஜேர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார். அடுத்த நாள் இது அமுலுக்கு வந்தது.
1946
சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1948
ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்டது.
1952
நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954
வியட்நாமில் “தியன் பியன் பு” சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
1960
பனிப்போர்: அமெரிக்காவின் யூ-2 போர் வானூர்தியின் விமானி காரி பவர்சு என்பவரைத் தாம் பிடித்து வைத்திருப்பதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் அறிவித்தார்.
1986
ஏழு கொடுமுடிகளிலும் ஏறிய முதலாவது மனிதர் என்ற சாதனையை பாட்ரிக் மரோ என்ற கனேடியர் ஏற்படுத்தினார்.
1992
நாசாவின் எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1994
நோர்வே தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து பெப்ரவரியில் திருடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் (ஓவியம்) மீளக் கைப்பற்றப்பட்டது.
1999
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உருமேனியா சென்றார். 1054 இல் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் கிழக்கு மரபுவழி திருச்சபை நாடொன்றுக்கு திருத்தந்தை சென்றது இதுவே முதல் தடவையாகும்.
1999
கொசோவோ போர்: நேட்டோவின் போர் விமானம் ஒன்று பெல்கிறேட் நகரில் சீனத் தூதரகம் மீது தவறுதலாகக் குண்டு வீசியதில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
1999
கினி-பிசாவு நாட்டின் அரசுத்தலைவர் ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2000
விளாதிமிர் புட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
2002
சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் உயிரிழந்தனர்.
2004
அமெரிக்கத் தொழிலதிபர் நிக் பெர்க் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படும் காட்சி காணொளியாக இணையத்தில் வெளியிடப்பட்டது.
2007
உரோமைப் பேரரசர் முதலாம் ஏரோதின் கல்லறை எருசலேம் நகருக்கருகில் இஸ்ரேலியத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
2007
நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.





