• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடகிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோக ஆதரவு

Mathavi by Mathavi
May 2, 2025
in இலங்கை செய்திகள், கட்டுரைகள்
0 0
0
வடகிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோக ஆதரவு
Share on FacebookShare on Twitter

இலங்கை வரலாற்றில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது. கிழக்கு மாகாணத்தில் இக்கட்சி உதயமானாலும் முதல் முதலாக அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெற்றது மாகாண சபைத் தேர்தல் மூலமாக வடகிழக்கிற்கு வெளியேயுள்ள மாகாணங்களில் தான்.

அரசியல் சூழ்நிலைக்கேற்ப தேர்தல்கள் வருகின்ற போது பெரும்பாலும் வடகிழக்கிற்கு வெளியில் தாங்கள் கூட்டணி அமைத்திருக்கும் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தங்களுக்குச் சாதகமான பிரதேசங்களில் போட்டியிட்டு வந்தார்கள்.

அவ்வப்போது வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் தேவை நிமித்தம் தனித்தும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தது.

ADVERTISEMENT

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கட்சி என்பதனால் நாடு தழுவியதாக ஆதரவாளர்கள் இருக்கத்தக்கதாக அதற்கேற்ப முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலும் அந்தந்தப் பிரதேசங்களுக்கான பிரதிநிதிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டமையினால் தேசியப்பட்டியலினூடாகவும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தமை ஒரு உற்சாகத்தை கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் இடதுசாரி ஆட்சி தோற்றுவிக்கப்பட்டாலும், ஆட்சியாளர்கள் மீது மக்களின் நம்பிக்கை தளர்ந்து கொண்டு செல்வதை ஆட்சியாளர்களின் சில செயற்பாடுகள் காரணமாக அமைந்திருக்கிறது என்பதைக் காண முடிகின்றது.

இச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுருந்து கொண்டு மக்களின் பலமான குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகி வரும் சூழலில் தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நாடு எதிர்நோக்கியிருக்கிறது.

தற்போதைய உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் முறையில் பெரும்பாலும் சபைகளை தனிக்கட்சி ஆட்சியமைப்பது கடினமாக இருப்பதால் கூட்டாட்சி முறையே அதிகம் சாத்தியப்படுவதை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கண்டுகொண்டோம்.

தேசிய அரசியலில் தேசிய கட்சிகளோடு கூட்டாக இருந்தாலும் குறித்த தேர்தலில் தனித்துக்கேட்கும் போது கட்சிகள் ஆசனங்களைப்பெற்று ஆட்சியில் பங்காளர்களாகும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் இம்முறை பல கட்சிகள் தனித்து தங்களின் சொந்தச் சின்னங்களில் போட்டியிடுவதைக் காணலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தளவில் வடகிழக்கில் மரச்சின்னத்திலும், வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் மரச்சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்திலும் இணைந்தும் போட்டியிடுகிறது.

வடகிழக்கிற்கு வெளியில் நீண்டகாலத்தின் பின்னர் மரச்சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதால் கொழும்பு, கண்டி, கம்பஹா போன்ற பல இடங்களில் அமோக வரவேற்பை மரம் பெற்று வருவதை தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் காண முடிகின்றது.

தேர்தல் இறுதிநேர சூறாவளி பிரச்சாரத்தில் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொள்ளும் நோக்கில் கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மக்களால் ஆமோக வரவேற்பளிக்கப்படுவதைக் காண முடிகின்றது.

இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பல இடங்களில் ஆட்சியமைக்கவும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.

தேர்தலின் பின்னரான சூழல் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமானதாக அமையுமென்பதை தேர்தல் கால முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் சமூகம் தொடர்பான போக்கு, எதிர்கால சவால்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூகமும் தங்களுக்கான தனித்துவக்கட்சி தொடர்பில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளதைக் காண முடிவதோடு, தேசிய மக்கள் சக்தியின் அலையில் அள்ளுண்டு போனவர்கள் தற்போது சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பலரும் தற்போது முஸ்லிம் காங்கிரஸை நோக்கி வருவதையும், அதன் வேட்பாளர்களை ஆதரிப்பதையும் காண முடிகிறது.

குறிப்பாக, இளைஞர்கள் அநுர அலையில் அள்ளுண்டாலும் தற்போதைய சூழ்நிலையில் தங்களது பிரதேசங்களுக்கு தேசிய மக்கள் சக்தி பொருத்தமான வேட்பாளர்களை அடையாளப்படுத்தவில்லை என்பதனால் அதிருப்தியடைந்து தங்களது ஆதரவை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வருவதையும் காணலாம்.

நமக்காய் பேசுவதற்கும் ஒரு கட்சி தேவை என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமை ரவூப் ஹக்கீமும் அடையாளம் பெறுகிறார்கள்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 day ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்குமாறு மனோ வலியுறுத்து..!

      by Thamil
      May 30, 2025
      0

      "ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா?...

      தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம் – சுமந்திரன் தெரிவிப்பு..!

      தமிழ் அகதிகள் விடயத்தில் அநுர அரசு இரட்டை வேடம் – சுமந்திரன் தெரிவிப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      "தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா?" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில்...

      கொட்டித் தீர்க்கப் போகும் மழை ; வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை..!

      கொட்டித் தீர்க்கப் போகும் மழை ; வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

      தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

      தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

      by Thamil
      May 30, 2025
      0

      போர்க் காலத்தில் உயிரைக் காக்க இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பிச் சென்ற முதியவர், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை...

      இறக்கும் முன் நீதியை வழங்குங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை..!

      இறக்கும் முன் நீதியை வழங்குங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை..!

      by Thamil
      May 30, 2025
      0

      காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர். எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட...

      நுவரெலியாவில் தொடரும் மழை, பலத்த காற்று ; வீட்டுக்கூரைகள் சேதம்..!

      நுவரெலியாவில் தொடரும் மழை, பலத்த காற்று ; வீட்டுக்கூரைகள் சேதம்..!

      by Thamil
      May 30, 2025
      0

      நுவரெலியா பிரதேச செயலகத்தின் இயங்கும் பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (30) காலை தொடர் லயன் குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் சேதமடைந்து உள்ளன. மேலும் பம்பரக்கலை இப்பகுதிக்கு...

      விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

      விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் இன்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

      வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

      வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

      by Mathavi
      May 30, 2025
      0

      அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் இன்று (30) காலை வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை...

      சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்வு.!

      சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்வு.!

      by Mathavi
      May 30, 2025
      0

      நானுஓயாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 28குடும்பங்களை சேர்ந்த 120 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்....

      Load More
      Next Post
      நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வரின் புகழுடலுக்கு பலரும் அஞ்சலி.!

      நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வரின் புகழுடலுக்கு பலரும் அஞ்சலி.!

      கடல் ஆமைகளை உண்ணும் அவல நிலை; பட்டினியில் வாடும் காசா மக்கள்

      கடல் ஆமைகளை உண்ணும் அவல நிலை; பட்டினியில் வாடும் காசா மக்கள்

      தமிழினத்தை அரசியல் ரீதியில் அடிமைகொள்ளும் அரசின் எண்ணத்தை தமிழ்த் தேசியத்தின் வெற்றியால் இல்லாமற்செய்வோம்.!

      தமிழினத்தை அரசியல் ரீதியில் அடிமைகொள்ளும் அரசின் எண்ணத்தை தமிழ்த் தேசியத்தின் வெற்றியால் இல்லாமற்செய்வோம்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி