• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வடகிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோக ஆதரவு

Mathavi by Mathavi
May 2, 2025
in இலங்கை செய்திகள்., கட்டுரைகள்
0
வடகிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோக ஆதரவு
Share on FacebookShare on Twitter

இலங்கை வரலாற்றில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது. கிழக்கு மாகாணத்தில் இக்கட்சி உதயமானாலும் முதல் முதலாக அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெற்றது மாகாண சபைத் தேர்தல் மூலமாக வடகிழக்கிற்கு வெளியேயுள்ள மாகாணங்களில் தான்.

அரசியல் சூழ்நிலைக்கேற்ப தேர்தல்கள் வருகின்ற போது பெரும்பாலும் வடகிழக்கிற்கு வெளியில் தாங்கள் கூட்டணி அமைத்திருக்கும் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தங்களுக்குச் சாதகமான பிரதேசங்களில் போட்டியிட்டு வந்தார்கள்.

அவ்வப்போது வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் தேவை நிமித்தம் தனித்தும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கட்சி என்பதனால் நாடு தழுவியதாக ஆதரவாளர்கள் இருக்கத்தக்கதாக அதற்கேற்ப முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலும் அந்தந்தப் பிரதேசங்களுக்கான பிரதிநிதிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டமையினால் தேசியப்பட்டியலினூடாகவும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தமை ஒரு உற்சாகத்தை கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் இடதுசாரி ஆட்சி தோற்றுவிக்கப்பட்டாலும், ஆட்சியாளர்கள் மீது மக்களின் நம்பிக்கை தளர்ந்து கொண்டு செல்வதை ஆட்சியாளர்களின் சில செயற்பாடுகள் காரணமாக அமைந்திருக்கிறது என்பதைக் காண முடிகின்றது.

இச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுருந்து கொண்டு மக்களின் பலமான குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகி வரும் சூழலில் தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நாடு எதிர்நோக்கியிருக்கிறது.

தற்போதைய உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் முறையில் பெரும்பாலும் சபைகளை தனிக்கட்சி ஆட்சியமைப்பது கடினமாக இருப்பதால் கூட்டாட்சி முறையே அதிகம் சாத்தியப்படுவதை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கண்டுகொண்டோம்.

தேசிய அரசியலில் தேசிய கட்சிகளோடு கூட்டாக இருந்தாலும் குறித்த தேர்தலில் தனித்துக்கேட்கும் போது கட்சிகள் ஆசனங்களைப்பெற்று ஆட்சியில் பங்காளர்களாகும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் இம்முறை பல கட்சிகள் தனித்து தங்களின் சொந்தச் சின்னங்களில் போட்டியிடுவதைக் காணலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தளவில் வடகிழக்கில் மரச்சின்னத்திலும், வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் மரச்சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்திலும் இணைந்தும் போட்டியிடுகிறது.

வடகிழக்கிற்கு வெளியில் நீண்டகாலத்தின் பின்னர் மரச்சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதால் கொழும்பு, கண்டி, கம்பஹா போன்ற பல இடங்களில் அமோக வரவேற்பை மரம் பெற்று வருவதை தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் காண முடிகின்றது.

தேர்தல் இறுதிநேர சூறாவளி பிரச்சாரத்தில் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொள்ளும் நோக்கில் கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மக்களால் ஆமோக வரவேற்பளிக்கப்படுவதைக் காண முடிகின்றது.

இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பல இடங்களில் ஆட்சியமைக்கவும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.

தேர்தலின் பின்னரான சூழல் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமானதாக அமையுமென்பதை தேர்தல் கால முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் சமூகம் தொடர்பான போக்கு, எதிர்கால சவால்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூகமும் தங்களுக்கான தனித்துவக்கட்சி தொடர்பில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளதைக் காண முடிவதோடு, தேசிய மக்கள் சக்தியின் அலையில் அள்ளுண்டு போனவர்கள் தற்போது சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பலரும் தற்போது முஸ்லிம் காங்கிரஸை நோக்கி வருவதையும், அதன் வேட்பாளர்களை ஆதரிப்பதையும் காண முடிகிறது.

குறிப்பாக, இளைஞர்கள் அநுர அலையில் அள்ளுண்டாலும் தற்போதைய சூழ்நிலையில் தங்களது பிரதேசங்களுக்கு தேசிய மக்கள் சக்தி பொருத்தமான வேட்பாளர்களை அடையாளப்படுத்தவில்லை என்பதனால் அதிருப்தியடைந்து தங்களது ஆதரவை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வருவதையும் காணலாம்.

நமக்காய் பேசுவதற்கும் ஒரு கட்சி தேவை என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமை ரவூப் ஹக்கீமும் அடையாளம் பெறுகிறார்கள்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

Related Posts

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2026
0

கொழும்பு, சீதாவாக்கை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் சம்பவ...

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

போதைப்பொருட்களுடன் ஒரே நாளில் 998 பேர் கைது.!

by Mathavi
May 25, 2026
0

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ்,...

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்.!

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்.!

by Mathavi
May 25, 2026
0

வெற்றுக் காசோலைகளில் மோசடியாக ஒப்பமிட்டமை தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.சாந்தசீலனை விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை வடமாகாண...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்றவிபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது....

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.!

by Mathavi
May 25, 2026
0

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும் என செய்தி ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது ஊடகம் பிரசுரித்திருந்தது. இச்செய்தியில்...

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

by Mathavi
May 25, 2026
0

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார...

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 25, 2026
0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல்...

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

by Mathavi
May 25, 2026
0

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர்...

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

by Mathavi
May 25, 2026
0

பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன. பல வருடங்களாக தங்களது சொந்தச் செலவில் இலட்சக்கணக்கான...

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

by Mathavi
May 25, 2026
0

முறையான மற்றும் அறிவியல் ரீதியான வேலைத்திட்டம் இன்றி எந்தவொரு பொறுப்பையும் ஏற்பது தவறு என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்குரிய தெளிவான வரைபடம் தன்னிடம் உள்ளதால் இன்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி