• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

admin by admin
May 30, 2025
in இலங்கை செய்திகள்.
0
தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!
Share on FacebookShare on Twitter

போர்க் காலத்தில் உயிரைக் காக்க இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பிச் சென்ற முதியவர், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு தாயகத்தில் இருந்து உயிர் தப்பி தமிழகத்துக்கு அகதியாகச் சென்றவர் முதுமையில் நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சின்னையா சிவலோகநாதன் எனும் யாழ். ஏழாலையைச் சேர்ந்த 75 வயது முதியவரே இவ்வாறு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 5 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இதன்போது 1997 ஆம் ஆண்டு ஏழாலையில் இருந்து மன்னார் சென்று அங்கிருந்து 12 ஆயிரம் ரூபா படகுக்குச் செலுத்தி சட்டவிரோதமாக கடல் வழியாகவே சந்தேகநபர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். இருந்தபோதும் இந்தக் காலத்தில் சட்டபூர்வமாகப் பயணிக்கும் வாய்ப்பும் இருந்தமையால் இவர் எதற்காகச் சட்டவிரோதமாக பயணித்தார் என்பது தொடர்பில், தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதனால் சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்காது விளக்கமறியலில் வைக்க வேண்டும் எனக் கேட்டு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் 45/01 கீழ் குற்றம் சாட்டப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக உயிரைக் காக்கும் நோக்கில் இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றபோது இந்த நபர் 1987 ஆம் ஆண்டு தமிழகத்துக்குச் தப்பிச் சென்றார்.

இவர் தமிழகத்தின் திருவண்ணாமலைப் பகுதியில் கண்ணகிபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி வாழ்ந்து தற்போது ஏழாலையில் வசிக்கும் தனது மகனுடன் முதுமைக் காலத்தில் வாழ்வதற்காக உரிய முறைகளின் கீழ் விண்ணப்பித்து சட்டபூர்வமாக நாடு திரும்பினார்.

முகாமில் அகதியாக வாழ்ந்தார் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகம் வழங்கிய (யு.என்.எச்.சி.ஆர்.) பதிவுச் சான்றிதழ், இலங்கை திரும்ப தமிழ்நாடு பொலிஸுக்குத் செய்த விண்ணப்பம், அதற்கு தமிழ்நாடு பொலிஸார் அவர் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என வழங்கிய சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு விண்ணப்பித்து இலங்கை திரும்புவதற்காகப் பெற்றுக்கொண்ட பிரயாண அனுமதி ஆகியவற்றைச் சரி பார்த்து ஐ. நா. அமைப்பே இலவச விமானச் சிட்டையையும் வழங்கியது. அவற்றின் பிரதிகள் மன்றுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே, குற்றஞ்சாட்டப்படுபவரை முழுமையாக விடுவிக்க வேண்டும்.

இலங்கை அகதிகள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் இருப்பது உலகின் சகல நாடுகளுக்கும் தெரியும். ஆனால் இலங்கைப் பொலிஸாருக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையானது. அகதி என்றால் அவர் சொல்லாமல்தான் போவார். அவரை அகதியாக ஏற்றுக்கொண்டால் அவர் பயணித்தமை குற்றமாகாது. அது மட்டுமல்ல ஒரு குற்றவியல் நடவடிக்கையாக இருந்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குள் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இங்கே 30 வருடங்கள் கடந்துவிட்டன.

இதேநேரம் இலங்கையில் இருந்து அகிகளாகச் சென்றவர்கள் நாடு திரும்ப வேண்டும் என அரசு உத்தியோகபூர்வமாக அழைக்கின்றது ஆனால், திரும்பியவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்குக் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டி வரும். தப்ப முடியாது.

இதேநேரம் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் சட்டப் பிரிவு 45/01 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்தால் நீதிவான் 47/ஏ பிரிவின் கீழ் பிணை வழங்க முடியும். அதனால் முழுமையாக விடுவிக்க முடியாத பட்சத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும்” என்றார்.

இவற்றை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் ஜே.சுபராஜினி சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

by selvan
May 21, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழுவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன தலைமையில்...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

by selvan
May 21, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய  வருடாந்த மகோற்சவ பெருவிழா  இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இன்றைய தினம் (21) காலை   உற்சவ மூர்த்திகளுக்கு ...

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

by selvan
May 21, 2026
0

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது விவகாரம் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்கரிய கருத்துக்கள், அந்த வழக்கோடு தொடர்புடைய 15 வயது சிறுமியை நோக்கமாகக் கொண்டவை அல்ல என...

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

by selvan
May 21, 2026
0

தமிழ் மக்களாயினும் சரி, சிங்கள மக்களாயினும் சரி, ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

by Mathavi
May 21, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள...

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி...

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

by Mathavi
May 21, 2026
0

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி