• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழில் அநுர கால் பதிக்க இடமளியோம் – மே தினக் கூட்டத்தில் சுமந்திரன் எச்சரிக்கை.!

Mathavi by Mathavi
May 1, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
யாழில் அநுர கால் பதிக்க இடமளியோம் – மே தினக் கூட்டத்தில் சுமந்திரன் எச்சரிக்கை.!
Share on FacebookShare on Twitter

“வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை அநுர அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி யாழ். மண்ணுக்கு வர முடியாமல் அல்லது கால் வைக்க முடியாமல் செய்வோம்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ADVERTISEMENT

“தொழிலாளர்களுக்காக அன்று முதல் இன்று வரை இந்த நாட்டில் செயற்படுகின்ற ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான். தமிழ் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நம்பிக்கையைப் பெற்ற பிரதான கட்சியும் எமது கட்சிதான்.

இப்படியாக உழைக்கும் தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் நாம் எப்போதும் உண்மையாகக் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் ஆட்சியில் உள்ள அநுரகுமார தரப்பினர் தொடர்ச்சியாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இவ்வாறு கடந்த காலங்களில் ஏமாற்றியவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ 51 வீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகிய போதும் அதே மக்களால் துரத்தியடிக்கப்பட்டதைப் பார்த்திருந்தோம்.

சிங்கள மக்களாலேதான் நான் வந்தேன் வந்தேன் எனக் கூறிக் கொண்டிருந்த கோட்டாவுக்கே இதே கதி என்றால் கேவலம் வெறுமனே 42 வீத வாக்குகளுடன் வந்த அநுரகுமாரவுக்கு என்ன நடக்குமோ தெரியாது.

ஆகவே, பொய்யான வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றாமல் உள்ளீர்கள். ஆக மொத்தத்தில் பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியுள்ளீர்கள்.

எனவே, உங்கள் வழியை நீங்கள் சரி பண்ணாவிட்டால் உங்களுக்கும் இதுதான் நடக்கலாம். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றாதீர்கள்.

குறிப்பாக நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் மக்களின் காணிகள் மக்களிடமே வழங்கப்படும் என்று கூறியிருந்தீர்கள். படையினர் வசமுள்ள மக்கள் காணியை விரைவில் விடுவிப்போம் என்றும் கூறியிருந்தீர்கள்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு மாறாக காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளீர்கள். உங்களுடைய இந்தச் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

உங்களது வாக்குறுதிக்கு மாறாக வடக்கில் காணிகளைச் சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் யாழ். மண்ணுக்கு வர முடியாமல் அல்லது கால் வைக்க முடியாமல் செய்வோம்.

எங்களை ஏமாளிகள் எனக் கருத வேண்டாம். ஏமாற்றுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம்.

மேலும், இன்றைய மே நாளில் நாம் சில தீர்மானங்களையும் எடுத்துள்ளோம். குறிப்பாக இராணுவக் கையிருப்பில் உள்ள எமது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும், தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

இன்றைக்கு நாட்டில் நாளாந்தம் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதிலும் தேர்தல் வரும்போது குறைப்பது மாதிரி குறைத்துக் கொண்டாலும் மறுபக்கம் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

குறிப்பாக சீனியை விட உப்பின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் ரஜலுனு என உப்புக்கு ஒரு புதிய பெயரை வைத்தவர்கள். அதைப் பற்றிக் கேட்டால் பெயரைப் பார்க்காதீர்கள், ருசியைப் பாருங்கள் எனச் சொல்கின்றார்கள்.

தமிழ்ப் பெயரை சிங்களப் பெயராக அவர்கள் மாற்றுவார்களாம். அதைப் பற்றி கேட்டால் சம்பந்தம் இல்லாமல் பேசுகின்றார்கள். ஆக தமிழ்ப் பெயரை அவர்கள் இங்கு மாற்றலாம். தாங்கள் தமிழ்ப் பெயரை வைக்கத் தயாரில்லை.

இவ்வாறானவர்கள்தான் எங்களுக்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களிலேயே இதெல்லாம் நடக்கின்றதென்றால் இனி என்ன என்ன எல்லாம் நடக்கப் போகின்றதோ பார்க்கலாம்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தங்களது அடிப்படைக் கொள்கைக்கு மாறானது எனக் கூறி அதற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றவர்கள் இன்றைக்கு அந்த ஒப்பந்தத்தில் எதனையும் மாற்றாது அப்படியே ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றனர்.

கடன் மறுசீரமைப்பு செய்கின்றபோது தொழிலாளர் வர்க்கத்துக்குச் செய்யும் துரோகம் என்று சொன்னவர்கள் அதனையே இன்று பெருமையாகப் பேசி வருகின்ற நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளது.

தங்களை இடதுசாரிகள் எனக் காட்டிகொண்டு மோசமான ஆட்சி செய்பவர்கள்தான் இந்த அநுரகுமார ஆட்சியாளர்கள்.

உங்களது தலைவர் ரோகண விஜயவீர தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறியிருக்கின்றார் என்றால் நீங்களும் உண்மையான இடதுசாரிகள் என்றால் தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு எனச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் சிவப்புச் சட்டை அணிவதில் அர்த்தம் இல்லை.

தொழிலாளர்களுக்கு நன்மை அளிப்பதாகக் கூறிக் கொண்டு முதலாளித்துவக் கொள்கையில் பயணித்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு எப்படி நன்மையளிக்க முடியும்? எனவே, முதலாளித்துவக் கொள்கையை விட்டு விலகி உங்களது பழைய ஆரம்பத்துக்கு வாருங்கள்.

லெலினிசக் கோட்பாட்டுக்கு வாருங்கள், சம்பள உயர்வு கொடுங்கள், அப்படியாக உங்களால் திரும்பி வர முடியாவிட்டால் மக்களிடம் செல்ல முடியாத நிலை உங்களுக்கு விரைவில் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான்.” – என்றார்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமைக்கு முதியவர்கள் வழிவிட வேண்டும்.!

      தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமைக்கு முதியவர்கள் வழிவிட வேண்டும்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      2009 முள்ளிவாய்க்கால் யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாக கொண்டு ஈழத் தமிழர்களையும் அவர்களது அரசியல் உரிமைசார் விடயங்களையும் துடிப்புடன் கொண்டு செல்லக் கூடிய...

      வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு மக்கள் கோரிக்கை.!

      வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு மக்கள் கோரிக்கை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் உள்ள தருமபுரம் வைத்தியசாலையில் போதிய அளவிலான புதிய கட்டிட வசதிகள் இருந்த போதிலும் மக்களுக்கான சிகிச்சை...

      சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு கண்டல் தாவரங்கள் நடுகை.!

      சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு கண்டல் தாவரங்கள் நடுகை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவின் சாம்பல் தீவு களப்பு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டது. சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர...

      தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி.!

      தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி.!

      by Mathavi
      May 31, 2025
      0

      புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள்...

      நுவரெலியாவில் பலத்த காற்று காரணமாக வகுப்பறைகள் சேதம்.!

      நுவரெலியாவில் பலத்த காற்று காரணமாக வகுப்பறைகள் சேதம்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      நுவரெலியா கந்தபளை நு/கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தின் பிரதான பாதையருகில் மரம் ஒன்று நேற்று மாலை (30.05.2025) வேளையில் முறிந்து விழுந்ததோடு பொதுமக்களால் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. மேலும் பலத்த...

      பிள்ளையானின் அலுவலகத்தில் மேலும் பல ஆயுதங்கள் சிக்கியது.!

      பிள்ளையானின் அலுவலகத்தில் மேலும் பல ஆயுதங்கள் சிக்கியது.!

      by Mathavi
      May 31, 2025
      0

      முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் நேற்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பின்னர்,...

      யாழ் மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு கட்டுப்படுமா பருத்தித்துறை நகர சபை.?

      யாழ் மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு கட்டுப்படுமா பருத்தித்துறை நகர சபை.?

      by Mathavi
      May 31, 2025
      0

      வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குடத்தனை பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அண்மைக்காலங்களில் பருத்தித்துறை நகரசபையினர் திண்மக் கழிவுகளை கொட்டி வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து...

      தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்கு வலையால் தொழிலை இழந்துள்ள மீனவர்கள்.!

      தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்கு வலையால் தொழிலை இழந்துள்ள மீனவர்கள்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர். சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான மீன்பிடி படகுகள் சென்று...

      பிரதி அமைச்சருக்கும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை.!

      பிரதி அமைச்சருக்கும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோருக்கிடையிலான தொழிற்சங்க பேச்சுவார்த்தை கடந்த (28) அம்பாறை மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு...

      Load More
      Next Post
      அநுர அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்க மக்களே அணிதிரளுங்கள்.!

      அநுர அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்க மக்களே அணிதிரளுங்கள்.!

      கணக்காளர் சேவை விசேட தரத்துக்கு 13 பேர் பதவி உயர்வு.!

      கணக்காளர் சேவை விசேட தரத்துக்கு 13 பேர் பதவி உயர்வு.!

      காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு..!

      காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி