1995
பலாலியில் அவ்ரோ விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
2000
இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2005
இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
1876
பிரித்தானிய இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
1920
அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932
மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1941
குரோவாசியாவில் குதோவாச் என்ற கிராமத்தில் 200 செர்பியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: ஒன்பது ஜேர்மனிய கடற்படைப் படகுகள் டைகர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினியும் அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1949
பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் மானுவல் குவிசோனின் மனைவி அவுரோரா குவிசோனும், அவரது மகள், மற்றும் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1952
ஜப்பானுக்கும் சீனக் குடியரசுக்கும் இடையில் தாய்பெய் நகரில் அமைதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரண்டாம் சீன-சப்பானியப் போர் முடிவுக்கு வந்தது.
1952
இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட சப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1965
டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
1967
வியட்நாம் போர்: முகம்மது அலி ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையில் சேர மறுத்ததை அடுத்து, அவரது குத்துச்சண்டை பதக்கமும், உரிமமும் பறிக்கப்பட்டன.
1969
சார்லஸ் டி கோல் பிரான்சின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
1970
வியட்நாம் போர்: கம்போடியாவில் அமெரிக்கப் படைகள் கம்யூனிச சரணாலயங்கள் மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
1975
வட வியட்நாம் இராணுவத்தினர் வெற்றியை நெருங்கிய போது, தெற்கு வியட்நாமின் இராணுவத் தலைவர் காவோ வான் வியென் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
1978
ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் முகமது தாவூது கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1986
செர்னோபில் அணு உலை விபத்தை அடுத்து சுவீடனில் உள்ள அணுவுலை ஒன்றில் உயர்மட்ட கதிர்வீச்சு பதிவானது. இதனால், செர்னோபில் விபத்து குறித்த செய்தியை சோவியத் அதிகாரிகள் பகிரங்கப்படுத்த வேண்டிவந்தது.
1988
அவாயில், அலோகா ஏர்லைன்சின் போயிங் 737 வானூர்தியின் கட்டகத்தில் ஏற்பட்ட பிளவை அடுத்து விமானப் பணிப்பெண் கிளாரபெல் லான்சிங் என்பவர் வானூர்தியில் இருந்து வெளியே வீசப்பட்டு உயிரிழந்தார்.
1996
அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் “மார்ட்டின் பிறையன்ட்” என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
2004
அபு கிரைப் சித்திரவதை மற்றும் கைதிகள் துஷ்பிரயோகம் குறித்த ஆதாரங்களை சிபிஎஸ் நியூஸ் வெளியிட்டது. ஈராக் கைதிகள் மீது அமெரிக்க துருப்புக்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததை உறுதிப்படுத்தின.






