வடக்கு மாகாணத்தில் இந்த வருட சிறுபோகச்செய்கையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வடமாகாண பிரதமசெயலாளர் ,வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண நீர்ப்பாசன மற்றும் விவசாய பணிப்பாளர்கள், ஐந்து மாவட்டங்களின் விவசாயப்பணிப்பாளர்கள்,நீர்ப்பாசன பொறியியலாளர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT