அம்பாறை மாவட்டம், தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூடு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது என்றும், படுகாயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழந்தார் என்றும் தெஹியத்தகண்டிய பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தீவிர விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.