27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை க்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட வியாரகல பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது

ஹப்புத்தளை பகுதியில் நிலவும் அதிகளவிலான பணி மூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

ஹாலிஎல பகுதியில் இருந்து மீரிகம செல்லும் போதே குறித்த லொறி விபத்துக்குள்ளான தாகவும் லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த லொறி !

User1

அரியநேந்திரன் அவர்கள் அப்பழுக்கற்ற தமிழ் தேசியவாதி.

User1

எரிபொருள் இன்மையால் திடீரென நிறுத்தப்பட்டது நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை!

User1

Leave a Comment