யாழ். மாநகர சபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை தேவையான இடங்களில் பொருத்தும் பணியினை யாழ். மாநகரசபை ஆரம்பித்துள்ளது.
நீண்டகாலத்தின் பின்பு புதிய மின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
யாழ்.மாநகர சபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகள் ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் தலா 25 மின்விளக்குகள் என்ற ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டு வட்டார ரீதியாக பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் யாழ். மாநகர சபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு வட்டாரத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரான ப.தர்சானந்தினால் மேற்படி மின்விளக்குகள் வட்டாரத்தின் பகுதிகளில் பரவலாகப் பொருத்தப்பட்டுள்ளன.
ஆத்திசூடி வீதி, உள் ஒழுங்கைகள், பிறவுண் வீதி, சபாபதி வீதி, நாச்சிமார் கோவிலடி மற்றும் உள் வீதிகள் என்பனவற்றில் முதற்கட்டமாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஏனைய ஒழுங்கைகளுக்கும் தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.












