• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!

Mathavi by Mathavi
June 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!
Share on FacebookShare on Twitter

இன்று தேசிய மக்கள் சக்தி அரசில் இருப்பவர்கள் அனைவரும் குரங்குகளைப் போலவே நடந்து கொள்கின்றார்கள் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளை மறந்து மதம் பிடித்தவர்களைப் போல் செயற்படுகின்றார்கள் என்றும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“இன்று நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் நாட்டின் உண்மையான விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை முற்றிலும் விடுத்து, குரங்குகளை எண்ணும் திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அன்று நாமல் கருணாரத்ன போன்றவர்கள், குரங்குகளை எண்ணும் விநோதமான பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

அவ்வாறு நாமல் கருணாரத்ன குரங்குகளை எண்ணிய பணத்துக்கு என்ன நடந்தது? அந்தப் பணம் தற்போது எங்கே உள்ளது? எண்ணப்பட்ட குரங்குகள் எங்கே? அவை அனுப்பப்படுவதாகக் கூறப்பட்ட தீவு உலக வரைபடத்தில் எங்குள்ளது என்று இன்று அரசில் இருக்கும் எவருக்குமே தெரியாது. இவர்களின் கூத்துக்களை நாடே பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தம்புத்தேகம மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் வாழும் நெல் விவசாயிகளின் தற்போதைய அவல நிலை குறித்துப் பாருங்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது சொந்தக் கிராமமான தம்புத்தேகமவுக்கோ அல்லது பொலன்னறுவைக்கோ எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை. அங்குள்ள விவசாயிகள் இன்று நிர்க்கதியாக்கப்பட்டுத் தங்களின் உரிமைகளுக்காகப் போராட்ட பேரணிகளை நடத்தி வருகின்றார்கள்.

அன்று நாமல் கருணாரத்ன போன்றவர்கள் கோவண ஆடையை அணிந்துகொண்டு, சாதாரண ஏழை விவசாயிகளுடன் வீதியில் இறங்கி, சோறு உண்டு, வீதிகளிலேயே படுத்துறங்கி, வாகனங்கள் கூடச் செல்ல முடியாதவாறு தொடர் போராட்டங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் இன்று ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் ஏற்பட்ட அதிகார போதையால் அவர்களுக்கே மதம் பிடித்துள்ளது.

முன்னர் விவசாயிகளுக்காகப் போராடியவர்கள் இன்று ஆட்சியில் அமர்ந்துகொண்டு விவசாயிகளுக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்த அரசின் அமைச்சர்கள் இன்று உழைக்கும் விவசாயிகளைக் ‘கசிப்பு குடிப்பவர்கள்’ எனக் கேவலமாகக் கூறுகிறார்கள். கிராமத்தில் கசிப்பு குடித்துக்கொண்டிருந்த ஒருவருக்குத்தான் தாங்கள் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சராக்கினோம் என்று விவசாயிகள் இன்று கவலை வெளியிடுகின்றார்கள்.” – என்றார்.

Related Posts

கல்முனைப்  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை – 33 வாகனங்கள் பறிமுதல்!

கல்முனைப்  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை – 33 வாகனங்கள் பறிமுதல்!

by selvan
June 29, 2026
0

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சோதனை நடவடிக்கைகளில் 32 மோட்டார் சைக்கிள்களும்  ஒரு முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த வெள்ளிக்கிழமை (28)...

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

by Mathavi
June 29, 2026
0

​தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்...

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

by Mathavi
June 29, 2026
0

நேற்றுமுன்தினம் இரவு நாவற்குழி பகுதியில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்...

மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்.!

மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்.!

by Mathavi
June 29, 2026
0

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மூளாய் 4ஆம் வீதியின் புனரமைப்பு பணிகளானது இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த...

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 29, 2026
0

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 போக்குவரத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. குறித்த நடவடிக்கை...

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது.!

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது.!

by Mathavi
June 29, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இன்று (29) அதிகாலை பொலிஸார் வீதிச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, விசுவமடு பகுதியிலிருந்து அனுமதி இன்றி மரங்களை...

பொசன் ஊர்வலம் மற்றும் கவிதைச் சொற்பொழிவு.!

பொசன் ஊர்வலம் மற்றும் கவிதைச் சொற்பொழிவு.!

by Mathavi
June 29, 2026
0

இந்த ஆண்டு, பொசன் திருவிழாவைக் குறிக்கும் வகையில், மஸ்கெலியா துனுத்துடு ஓய மகா வித்தியாலய மாணவர்களின் பங்கேற்புடன், இன்று பொசன் ஊர்வலமும் அழகான கவிதைச் சொற்பொழிவும் நடத்தப்பட்டன....

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

by Mathavi
June 29, 2026
0

யாழ். மாநகர சபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை தேவையான இடங்களில் பொருத்தும் பணியினை யாழ். மாநகரசபை ஆரம்பித்துள்ளது. நீண்டகாலத்தின் பின்பு புதிய மின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன....

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

by Mathavi
June 29, 2026
0

மாகாண மட்ட விவாதப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நிலையை அடைந்த வட்டு இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம்...

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 29, 2026
0

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் கூட்டம் இன்று (29) அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) வளாகத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி