27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி !

இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர, பிள்ளைர் சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

26 வயதுடைய நபரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் கவுந்திஸ்ஸ புர, ஸ்ரீபுர பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபர்களைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கிளப் வசந்த் கொலை: மற்றொரு சந்தேக நபர் கைது !

User1

“அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனை சிறுமிக்கு கெளரவம்.

sumi

பயணிகள் உயிருக்கு உலைவைக்கும் பேருந்து ஓட்டுநர்! வெளியான காணொளியால் அதிர்ச்சி

sumi

Leave a Comment