28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி !

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்புள்கம, பனாகொட வீதியின் ஜல்தர பகுதியில் நேற்று (15) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதை அடுத்து, ஒரு மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.

இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெடிகமுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென கட்சி ஒன்றின் தலைவரால் உத்தரவு?

User1

சற்று முன் கட்டைக் காட்டில் பொலிசாரால் சட்டவிரோத சுருக்கு வலை பறிமுதல்

Thinakaran

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ,போராட்டத்திற்கு தடையுத்தரவு

User1

Leave a Comment