28.2 C
Jaffna
September 8, 2024
உலக செய்திகள்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலி விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜெபஸ்டின் பினிரா ஹெலி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா. பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். அந்த ஹெலிகாப்டரில் ஜெபஸ்டின் உட்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர்.

லகோ ரங்கொ அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஜெபஸ்டின் பினிரா உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Related posts

இத்தாலியில் கொள்ளையடிக்க சென்ற இலங்கையரின் பரிதாப நிலை

User1

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடி, 300க்கும் மேற்பட்ட உயிர்களையும் இழந்து இந்த நிலையில் போய்க்கொண்டிருக்கிறது …

User1

பெண்களுக்கு எதிராக தாலிபான்களின் புதிய சட்டம்

User1