27.9 C
Jaffna
September 7, 2024
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரியாழ் செய்திகள்

மது போதையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் கைது

யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ஏறி வைத்திய சாலைக்குள் உட்புகுந்த இருவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் கைபேசிகள் உள்ளிட்டவை களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது எனவும், இவை தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டும் , பொலிஸாரின் விசாரணைகள் மந்த கெதியில் முன்னெடுக்கப்படுவதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைபவர்கள் , வைத்திய சாலை வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்களை கட்டுப்படுத்த வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்

User1

சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்து-சம்பந்தன் அறிவுறுத்தல்..!

sumi

கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

sumi

Leave a Comment