• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் மொட்டுக் கட்சிக்கு இல்லை.!

Mathavi by Mathavi
May 27, 2026
in இலங்கை செய்திகள்.
0
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் மொட்டுக் கட்சிக்கு இல்லை.!
Share on FacebookShare on Twitter

“அரசின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளினால் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான நெருக்கடிகளை மறைப்பதற்காகவே, அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சிகள் மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நாடகமாடி வருகின்றார். எமது தரப்பு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கவில்லை, மக்களின் துயரங்களுக்காகவே குரல் கொடுக்கின்றது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் பதிலடி கொடுத்துள்ளார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் என்பது மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்த்துவிடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் பிமல் ரத்நாயக்க போன்ற ஆளுந்தரப்பு முக்கியஸ்தர்கள், நாட்டின் யதார்த்த நிலையை உணராமல் இன்னும் மேடை முழக்கங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று நாட்டில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வரிச் சுமைகளும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் சாதாரண மக்களை வாழவிடாமல் நெருக்குகின்றன.

மக்களின் இந்த உண்மையான குமுறல்களையும், நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவையும் ‘பொய்ப் பிரச்சாரம்’ என்று கூறி தட்டிக்கழிக்க அரசு முயல்கின்றது. தங்களின் நிர்வாகத் திறமையின்மையையும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையையும் மறைக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய தரப்பினர் மீது பழிபோடுவது ஆளுந்தரப்பின் பலவீனத்தையே காட்டுகின்றது.

நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்பதற்காக, மக்களின் ஜனநாயகக் குரலையோ அல்லது எதிர்க்கட்சிகளின் சுட்டிக்காட்டுதல்களையோ அசைக்க முடியாது என்று ஆணவத்துடன் பேசக் கூடாது. கடந்த காலங்களில் மக்கள் ஆணை எவ்வாறு மாறியது என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது.

நாட்டை மீண்டும் ஸ்திரமான பொருளாதாரப் பாதைக்குக் கொண்டு வர அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை. அதனால்தான், தங்களின் தோல்விகளை மூடிமறைக்க இவ்வாறான அரசியல் ரீதியான பழிவாங்கல்களையும், திசைதிருப்பும் பிரசாரங்களையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர். எமது தரப்பு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கவில்லை, மக்களின் துயரங்களுக்காகவே குரல் கொடுக்கின்றது.” – என்றார்.

Related Posts

அனுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

by selvan
May 27, 2026
0

அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி  ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு...

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்ப்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!

by selvan
May 27, 2026
0

கடந்த 25 ஆம் திகதி   தொழிலுக்காகச் சென்ற நிலையில்  காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடற்ப்பரப்பில் இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் இன்று புங்குடுதீவு...

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீர் மரணம்!

by selvan
May 27, 2026
0

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது. கச்சேரியடி, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற...

மட்டக்களப்பில் தீ விபத்து – இரு குழந்தைகள் பலி!

மட்டக்களப்பில் தீ விபத்து – இரு குழந்தைகள் பலி!

by selvan
May 27, 2026
0

மட்டக்களப்பில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று வயது நிரம்பிய...

கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

by selvan
May 27, 2026
0

கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று காலை சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமது வாழ்வாதரம் பாதிக்கும் வகையில் கொடிகாமம்...

பொலீசாரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்

பொலீசாரிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்

by selvan
May 27, 2026
0

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில்...

அம்பாறையில் பெண்கள் சந்தை மற்றும் உணவகங்களில்  சோதனை

அம்பாறையில் பெண்கள் சந்தை மற்றும் உணவகங்களில்  சோதனை

by selvan
May 27, 2026
0

அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் ஜே.மதனின்  தலைமையில் இன்று...

ஹட்டனில் இருந்து கொழும்புக்கு தனியாக செல்ல எத்தனித்த 7 வயது சிறுவன் மீட்பு

ஹட்டனில் இருந்து கொழும்புக்கு தனியாக செல்ல எத்தனித்த 7 வயது சிறுவன் மீட்பு

by selvan
May 27, 2026
0

பெற்றோரை சந்திப்பதற்காக ஹட்டனில் இருந்து தனியாக கொழும்பு செல்ல முற்பட்ட 7 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் இலங்கை போக்குவரத்து...

ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்தமைக்குக் கண்டனம்!

ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்தமைக்குக் கண்டனம்!

by selvan
May 27, 2026
0

ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் அவர்களை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமையானது ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாகும் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது வவுனியா மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வரும்...

வீதி விதிமுறைகளை மீறிய 40 ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றல்!

வீதி விதிமுறைகளை மீறிய 40 ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றல்!

by selvan
May 27, 2026
0

கிளிநொச்சியில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத 40க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த வாகனங்கள் கைப்பற்றப் பட்டதாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி