கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்பு எதிர்வீட்டில் வசித்த நன்கு தெரிந்த நபர் ஒருவர், சொக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை உந்துருளியில் கடத்திச் சென்றுள்ளார்.
சிறுமி காணாமல் போனதும், குடும்பத்தினருடன் சேர்ந்து தேடுவது போல் அவரே நாடகமாடியுள்ளமை சிசிரிவி (CCTV) காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
மிகவும் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், தலைமுடியைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளதாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தமிழக அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
அத்துடன், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தகொடூரக் கொலை தொடர்பாக மேலதிக போலீஸ் பணிப்பாளர் நாயகம் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.










