தமிழ்நாட்டின், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும், காங்கிரஸைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கொளத்தூர் தொகுதி உறுப்பினர் பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்
இதேபோன்று, திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமாவுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனை 69,992 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது










