• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

மோடி – மெலோனி மிட்டாய் விவகாரம் – பங்குச் சந்தையில் தாக்கம்!

selvan by selvan
May 21, 2026
in இந்திய செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை இணைத்து இணையத்தில் பரவிய ‘மெலடி’ மீம்ஸ் மற்றும் மிட்டாய் குறித்த காணொளி காரணமாக, இந்த உயர்வு பதிவாகி உள்ளது.

இந்த அதிரடி விலை உயர்வுக்குப் பின்னணியில் ஒரு பெரும் குழப்பம் நீடிப்பதாகப் பங்குச்சந்தை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புகழ்பெற்ற ‘மெலடி’ (Melody) மிட்டாயைத் தயாரிப்பது ‘பார்லே புராடக்ட்ஸ்’ (Parle Products) என்ற நிறுவனமாகும்.

இந்நிறுவனம் பொதுப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத (Unlisted) ஒரு தனியார் நிறுவனமாகும்.

ஆனால், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்திற்கும், இந்த மிட்டாயைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் இடையே எந்தவொரு வணிகரீதியான தொடர்பும் இல்லை.

இது வெறும் பெயரில் மட்டுமே ஒற்றுமையைக் கொண்ட முற்றிலும் வேறொரு நிறுவனமாகும்.

இருப்பினும், பெயரிலுள்ள ‘பார்லே’ என்ற ஒற்றுமை காரணமாக முதலீட்டாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அவசர அவசரமாக அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முண்டியடித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியப் பிரதமருக்கு ‘பார்லே மெலடி’ மிட்டாய் பாக்கெட் ஒன்றை பரிசாக வழங்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு ஒன்று நேற்றையதினம் இணையம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்குகளைப் பெருமளவில் வாங்கத் தொடங்கினர்.

இதனால் அன்றைய தினமே அந்நிறுவனத்தின் பங்கு விலை 5% என்ற அதன் ஒருநாள் உச்சவரம்பை எட்டியது.

இந்த நிலையில் இந்த விசித்திரமான நிலைமை இன்றும்  நீடித்தது.

இன்றைய வர்த்தக அமர்விலும் பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை மீண்டும் ஒருமுறை 5% உச்சவரம்பைப் பதிவு செய்தது.

இதன்படி, கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒட்டுமொத்தமாக 10% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது பங்குச்சந்தை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

by selvan
May 21, 2026
0

தமிழ்நாட்டின், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.சென்னை கிண்டி ஆளுநர்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் – அமைச்சரவை விழாவில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

by selvan
May 21, 2026
0

சென்னை  ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் வழக்கமாக நடைபெறும்...

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

by selvan
May 21, 2026
0

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று

by selvan
May 21, 2026
0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ம் திகதியான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்...

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

by selvan
May 21, 2026
0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தமிழக அரசுக்கு 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இல்லற வாழ்க்கையை நிறைவு...

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து; பலர் உயிரிழப்பு.!

by Mathavi
May 18, 2026
0

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

சென்னையில் உணர்வு ரீதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
May 18, 2026
0

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக்...

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

by Bharathy
May 16, 2026
0

வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். அண்மையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்...

இரத்து செய்யப்பட்ட நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!

இரத்து செய்யப்பட்ட நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!

by Bharathy
May 16, 2026
0

இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய...

உத்தரப் பிரதேசத்தில் 111 பேர் உயிரிழப்பு.!

உத்தரப் பிரதேசத்தில் 111 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி