• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

selvan by selvan
May 23, 2026
in இந்திய செய்திகள்
0
இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.

அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் லீற்றரொன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான தொகையை உயர்த்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில், கடந்த 10 நாட்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்படி, தலைநகர் புதுடெல்லியில் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 87 சதத்தினால் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 51 சதமாகவும், டீசல் லீற்றரொன்றின் விலை 91 சதங்கள் உயர்த்தப்பட்டு 92 ரூபாய் 49 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ஒரே வாரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்றாவது உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முறைக்கான 2 ரூபாய் விலை குறைப்பைத் தவிர, இந்தியாவில் எரிபொருள் விலைகள் பெருமளவில் மாற்றமின்றி ஸ்திரமாகவே காணப்பட்டன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து உலகளாவிய சந்தையில் ஏற்பட்ட கொந்தளிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக இந்தியன் ஆயில் கோர்ப்பரேஷன் உள்ளிட்ட அரச எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் தினசரி விலை திருத்த நடைமுறையை 2022 இல் நிறுத்தி வைத்திருந்தன.

இருப்பினும், தற்போதைய போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் சராசரியாக ஒரு பீப்பாய் 69 டொலராகக் காணப்பட்ட இந்தியாவின் மசகு எண்ணெய் கொள்முதல் விலை, சமீபத்திய மாதங்களில் 113 முதல் 114 டொலர் வரை உயர்ந்துள்ளது.

இந்தியா தனக்குத் தேவையான மசகு எண்ணெயில் சுமார் 90 சதவீதத்தை இறகுமதி மூலமே பூர்த்தி செய்வதனால், சர்வதேச சந்தையின் இந்த விலை மாற்றங்கள் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts

கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – அயலவர் கைது!

கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – அயலவர் கைது!

by selvan
May 23, 2026
0

கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பு எதிர்வீட்டில் வசித்த நன்கு...

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்

by selvan
May 23, 2026
0

தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்...

தமிழக முதலமைச்சர் விஜயின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி திருபுபடுத்தப்பட்டுள்ளது!

by selvan
May 23, 2026
0

ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக்...

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!

by Mathavi
May 22, 2026
0

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

சமூக ஊடகங்களில் வெடித்த புதிய அரசியல் அலை – வைரலான ‘கரப்பான்பூச்சி’ இயக்கம்!

by selvan
May 22, 2026
0

இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களின் விரக்தியையும், அரசியல் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ள “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party - CJP) என்ற நையாண்டி இணைய...

வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் மோடி

வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் மோடி

by selvan
May 22, 2026
0

ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு திரும்பினார்.கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை,...

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சென்னையில் போராட்டம்!

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சென்னையில் போராட்டம்!

by selvan
May 22, 2026
0

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து,  சென்னையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இந்த...

மோடி – மெலோனி மிட்டாய் விவகாரம் – பங்குச் சந்தையில் தாக்கம்!

by selvan
May 21, 2026
0

இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

by selvan
May 21, 2026
0

தமிழ்நாட்டின், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.சென்னை கிண்டி ஆளுநர்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் – அமைச்சரவை விழாவில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

by selvan
May 21, 2026
0

சென்னை  ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் வழக்கமாக நடைபெறும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி