• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தந்தை செல்வாவின் 49ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு.!

Mathavi by Mathavi
April 26, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
தந்தை செல்வாவின் 49ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு.!
Share on FacebookShare on Twitter

நீதியாக இருக்க வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், சமத்துவமாக இருக்க வேண்டும். அதே இடத்தில் சட்டப்படியான ஆட்சி இருக்க வேண்டும். ஊழல் மோசடிகள் இல்லாமல் ஆட்சி செய்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்வதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள், உயிர்க்கொலைகள், கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற மோசமான செயல்கள் நடைபெற்றன. இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து ஆட்சி அமைப்பார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மூன்று ஜனாதிபதிகள் அந்த உண்மைகளை மறைத்துச் சென்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய நிலையில் அந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவர்களுடன் கூட இருந்தவர்கள் சாட்சியங்களாக மாறி உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இப்போது நடைபெறுகின்ற விசாரணை திருப்தியளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 49ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்றைய தினம் தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகவும் தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இரத்ததானம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் க.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன், மாநகரசபையின் பிரதி முதல்வர் தினேஸ் உட்பட பிரதேசசபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், வாலிப முன்னணி உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் சேயோன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்களினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் ஒன்றும் நடாத்தப்பட்டது. இந்த இரத்ததான நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்தக்கொடை வழங்கியதையும் காணமுடிந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக கடந்த காலங்களில் உண்மைகளை மூடி மறைக்கின்ற ஒரு செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதாவது அந்த பலியானவர்கள் தான் முக்கியமான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டிருந்தது.

மூன்று ஜனாதிபதிகள் அந்த உண்மைகளை மறைத்துச் சென்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய நிலையில் அந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுடன் கூட இருந்தவர்கள் சாட்சியங்களாக மாறி உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இப்போது நடைபெறுகின்ற விசாரணை திருப்தியளிக்கின்றது. உண்மையான குற்றவாளிகள் பிடிபடக்கூடிய நிலைமை இருக்கின்றது. யாரும் அப்பாவிகளாக இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அப்பாவிகள் வேடத்தில் கொடும்பாவிகளாக இருந்து இந்த குற்றச்செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

உயிர்களைப் பலியெடுக்கலாம் உண்மைகளைப் புதைக்க முடியாது. புத்தகங்களை எழுதி உண்மைகளை மறைக்கின்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இப்போது அந்த விடயங்கள் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் கடந்து உண்மைகள் வெளிக்கொணரக்கூடிய ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட 278 மக்கள், கொல்லப்பட்ட 278 மக்கள் இருக்கின்றார்கள், அப்பாவிகள், பக்தர்கள். அதேபோன்று 500-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களுடைய உயிரைப் பெற முடியாது நீதி கிடைக்க வேண்டும். இதற்குச் சூத்திரதாரியாக இருந்தவர் பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இப்போது மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ளவரும் கைது செய்யப்பட்டு உள்ளுக்குள் இருக்கின்றார். அவரும் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படுகிறார். அவரோடு இன்னொரு அரசியல்வாதியும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. எவராக இருந்தாலும் இந்த அப்பாவிகளைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். அந்தத் தண்டனை நீதியின் மூலமாக சட்டத்தின் மூலமாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.”

உண்மையில் தற்போதைய நிலையில் ஆளுங்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் மிகவும் நலிவான அல்லது பலவீனமான நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய நிலைமை இப்போதைக்கு எங்களுக்குத் தெரியவில்லை.

வழக்கமாக எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை வீழ்த்தி ஆட்சிப்பீடம் ஏற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுண்டு. அந்த அடிப்படையில் அவர் சிந்திக்கின்றார்கள். ஆனால் தற்போதான நிலையில் அதற்குரிய வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் நீதியாக நியாயமாக அரசாங்கம் இயங்குமாக இருந்தால், ஊழல் மோசடி இல்லாமல் இயங்குமாக இருந்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்ந்து செல்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

நீதியாக இருக்க வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், சமத்துவமாக இருக்க வேண்டும். அதே இடத்தில் சட்டப்படியான ஆட்சி இருக்க வேண்டும். ஊழல் மோசடிகள் இல்லாமல் ஆட்சி செய்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்வதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள், உயிர்க்கொலைகள், கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற மோசமான செயல்கள் நடைபெற்றன. இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து ஆட்சி அமைப்பார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கின்றது. ஆகவே மக்கள் அதனைப் பார்த்துக்கொள்வார்கள்.

Related Posts

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

by selvan
May 25, 2026
0

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

by selvan
May 25, 2026
0

வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...

இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

by selvan
May 25, 2026
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று  கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

by selvan
May 25, 2026
0

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

by selvan
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொ*லை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46)...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

by selvan
May 25, 2026
0

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்பு!

by selvan
May 25, 2026
0

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்க்கப்பட்டுள்ளது.இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த...

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

by selvan
May 25, 2026
0

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்புப் பிரதி...

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

by selvan
May 25, 2026
0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, இன்று கைது செய்யப்பட்ட நிலையில் கடுவல நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. பத்தரமுல்லையில் தேசிய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி