• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஜே.வி.பியினரே உண்மையான இனவாதிகள் – கஜேந்திரகுமார் விளாசல்..!

Thamil by Thamil
April 25, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஜே.வி.பியினரே உண்மையான இனவாதிகள் – கஜேந்திரகுமார் விளாசல்..!
Share on FacebookShare on Twitter

“இனவாதம் இல்லை… இனவாதம் இல்லை என உதட்டளவில் மேடைகளில் கூறிக் கொண்டாலும் இனவாதத்தை ஜே.வி.பியினரே வெளிப்படுத்துகின்றனர். அவர்களே உண்மையான இனவாதிகள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் தெற்கில் மட்டுமில்லாது வடக்கு, கிழக்கிலும் தாங்கள் தான் பெரிய கட்சி என்றும், தமக்கே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்றும் ஜே.வி.பியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். உண்மையில் வடக்கு, கிழக்கிலுள்ள 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேரே ஜே.வி.பியினர். ஏனையவர்களில் தமிழரசுக் கட்சி 8, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 1, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1, சுயேச்சைக் குழு 1 என்றவாறாகவே ஆசனங்கள் உள்ளன. இவ்வாறிருக்கையில் எதனடிப்படையில் தாம் தான் பெரிய கட்சி என்றும், தமக்கே மக்கள் ஆணை வழங்கி உள்ளனர் என்றும் ஜே.வி.பியினர் கூறுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

ADVERTISEMENT

இதனை உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் கூடத் தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்தப் பொய்ப் பிரச்சாரத்தையும், ஜே.வி.பியின் ஏமாற்றுத்தனங்களையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டோடு அவர்கள் இப்போது இல்லை எனவும் கூறி வருகின்றனர். அவர்களுக்குச் சமஷ்டியோ, சுயாட்சியோ அவசியமில்லை என்றும், அவர்களைச் சமத்துவமாகக் கருதினால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் அவர்கள் வாழ்வார்கள் என்றவாறாகப் பேசி வருகின்றனர்.

அதே போன்று கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகள் ஊழல் நிறைந்த இனவாதத்துடன் செயற்பட்டதாலேயே தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியவில்லை. ஆனால் நாம் ஊழல், இனவாதம் இல்லாத ஒரு கட்சியாகவே செயற்பட்டு வருவதால் எமக்கு தமிழ் மக்களும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இப்படி இன, மத பாகுபாடு பார்க்காதவர்கள் என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் ஏன் நிறைவேற்றவில்லை? தாம் வழங்கிய வாககுறுதிகளை தாமே நிறைவேற்றத் தெரியாதவர்களாம்.

உண்மையில் இன, மத வேறுபாடு பார்க்காதவர்கள் என்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிதியைக் கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? அரசு என்றவுடன் மக்களை அச்சுறுத்தி மிரட்டல் விடுவதா? இவர்களது அரசியல் மாற்றம் எனக் கேட்கின்றோம்.

என்.பி.பி என்று சொல்லுகின்ற ஜே.வி.பியின் கதைகள், பேச்சுக்கள், செயற்பாடுகள் எல்லாமே ஏமாற்று வித்தைகள்தான். தாங்கள் இனவாதம் இல்லை என்றும், இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜே.வி.பியினர்தான் முற்றுமுழுதான இனவாதிகள். இவர்கள் பெயரளவிலே இனவாதமில்லை எனச் சொல்லிக்கொண்டு இருந்தாலும் எல்லாவற்றிலும் இனவாதம் கொண்டவர்கள் இந்த ஜே.வி.பியினர்தான்.

சின்னச் சின்ன விடயங்களுக்குக் கூட தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் தான் இனவாதத்தைத் தூண்டுவதாகச் சொல்லும் இவர்கள் தமிழ் மக்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு ஏன் தீர்வை வழங்க முடியாமல் இருக்கின்றனர்.

ஒரு பக்கம் நீங்கள் தான் பெரிய கட்சி என்றால் தையிட்டி விகாரை போன்ற இனவாதமில்லாத சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு இனவாதம் இல்லாமல் தீர்வை வழங்கலாமே. ஏன் இவர்களால் முடியவில்லை? ஆகவே, உங்களிடம் இனவாதம் இல்லை என்றால் முதலில் தையிட்டி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுக்க நீங்கள் தயாரா எனச் சவால் விடுக்கின்றோம்.

ஆக மொத்தத்தில் தமிழ் மக்களின் ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்க்க முடியவில்லை என்பதால் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து, இனவாதம் என்று பெயரைச் சூட்டிக்கொண்டு கடந்து செல்லப் பார்க்கின்றனர்.

உண்மையில் இனவாதம் என்றால் சட்டவிரோத நடவடிக்கைக்கு , நடவடிக்கை எடுக்காமல் அதனை முடக்குவது தான் இனவாதம். இவ்வாறாக தமிழ் மக்களின் ஒவ்வொரு விடயத்துக்கும் குறிப்பாக தாமே வழங்கிய வாக்குறுதிகள் உட்பட அனைத்தையும் தட்டிக்கழித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றனர்.

இத்தகைய பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு இந்தத் தேர்தலில் சந்தர்ப்பத்தை வழங்கினால் அது தமிழ் மக்களுக்கே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எங்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கொடூரமானவர், இனவாதி என்பதெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு சிங்கள மக்களுக்கு இரண்டு வருடங்கள் எடுத்திருந்தன. ஆனால், பல்வேறு கதைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாதவராக தன்னுடையதும், தமது கட்சியினதும் உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகின்றார். ஆக அநுரவைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள ஆறு மாதங்கள் எடுத்துள்ளது.

எனவே, உண்மையான முகத்தை அறிந்துகொண்டுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் நிதானமாகச் சிந்தித்து எதிர்காலத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

      வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

      by Thamil
      May 29, 2025
      0

      வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு பெருவிழா இன்று (29.05) பாடாசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து...

      அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

      அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

      by Thamil
      May 29, 2025
      0

      போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்து ஒன்றின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பத்து நாட்களுக்குள் பேருந்தை சீரமைக்காவிடில் பேருந்திற்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும்...

      மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

      மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

      by Thamil
      May 29, 2025
      0

      மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதானது மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய...

      வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

      வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது....

      மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

      மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மன்னார் மற்றும் செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

      கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.!

      கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது நடைபெற்றது. குறித்த கூட்டத்தில்...

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      தேசிய மக்கள் சக்தி அநீதி இழைத்துள்ளதாக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக...

      மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.!

      மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹட்டன் மஸ்கெலிய பிரதான பாதையில் பாரிய மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் அவ்வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு...

      விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; யாழைச் சேர்ந்த ஒருவர் கைது.!

      விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; யாழைச் சேர்ந்த ஒருவர் கைது.!

      by Mathavi
      May 29, 2025
      0

      டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், தென்னாபிரிக்காவை சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் இன்று (29)...

      Load More
      Next Post
      இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் ரணில் – சட்டத்தரணி அறிவிப்பு..!

      இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் ரணில் - சட்டத்தரணி அறிவிப்பு..!

      கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து..!

      கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து..!

      கடற்தொழில் அமைச்சரின் சைகையால் அதிருப்தி..!

      கடற்தொழில் அமைச்சரின் சைகையால் அதிருப்தி..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி