• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

Mathavi by Mathavi
May 29, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!
Share on FacebookShare on Twitter

மன்னார் மற்றும் செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (29.05) இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கா தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (29.05) இடம்பெற்ற கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான முன்மொழிவுகளை வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டம் சார்ந்த முன்மொழிவுகளை முன்வைத்து இருந்தேன்.

ADVERTISEMENT

இதன்போது, அதனை நிறைவேற்ற வேண்டியதன் கட்டாயத்தையும் எடுத்துக் கூறியிருந்தேன். மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம் மற்றும் பாலம்பிட்டிக்கு இடையிலான பாதை தொடர்பாகவும் பேசியிருந்தேன். 12 கிலோ மீற்றர் வீதியில் இந்த வருடம் 2 கிலோ மீற்றர் போடப்படவுள்ளது. மிகுதி 10 கிலோ மீற்றர் வீதியை காபெற் இடுவதற்கு முன்மொழிந்து இருந்தேன். இந்தப் பகுதி மக்கள் தமது அரச சேவைகளை மேற்கொள்வதற்கு இந்த வீதி சீரின்மையால் மேலதிகமாக 70 கிலோ மீற்றர் தூரத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. அதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அடுத்த வருடம் நிதி ஒதுக்குவதாக கூறியிருந்தார்.

அதுமட்டுமன்றி, மன்னார் மாவட்டத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமே குடிநீர் பெறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணற்று தண்ணீர் உவர் நீராக மாற வாய்ப்புள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தெரிவித்துள்ளனர். எனவே அதற்கு மாற்றீடாக ஏற்கனவே முன்மொழியப்பட்டு செயற்படுத்தப்படுகின்ற மல்வத்து ஓயாத் திட்டம் மந்த கதியில் உள்ளது. அதை விரைவுபடுத்த நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அந்த திட்டத்தை மேற்கொள்ளும் போது முழுமையாக மன்னார் மாவட்டத்திற்கும், செட்டிக்குளத்திற்கும் குடிநீரை வழங்க முடியும் என்பதுடன் லிவசாயத்தையும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தேன்.

மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையில் பாதைச் சேவை இடம்பெற வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி இருந்தேன். அதன் முக்கியத்தையும், அது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகர் கூறிய விடயத்தையும் கூறியிருந்தேன். இந்திய உயர் ஸ்தானிகர் இறங்குதுறை அமைக்குமாறு கோரினார். அதற்கான முன்மொழிவை சமர்ப்பித்தேன்.

மன்னார் தீவுப் பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படுகிறது. வடிகாலமைப்பு சீரில்லாது புகையிரத பாதைகள், வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல மாதங்களாக பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு நிரந்த தீர்வை காண 198 மில்லியன் ரூபாய் தேவை என கூறியிருந்தேன். அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் சிறிய, பெரிய குளங்கள் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாது உள்ளது. இதனால் நீரினைத் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. பல குளங்கள் முழுமையாக புனரமைக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் கருத்துக்கள முன்வைத்திருந்தேன். வவுனியா மாவட்ட செயலக கட்டடமானது 138 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதனை திருத்தி அமைக்க வேண்டிய தேவைகள், அதனை நவீனமயப்படுத்த வேண்டிய தேவைகள் உள்ளது. அது தொடர்பான முன்மொழிவுகளை அரசாங்க அதிபர் என்னிடம் வழங்கியிருந்தார். அதனை நான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்திற்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதனை முழுமைப்படுத்த இன்னும் 1000 மில்லியன் ரூபாய் தேவை எனவும் கூறியிருந்தேன். பாண்டியன்குளம், குத்துபாலம சிதைவடைந்து போக்குவரத்துக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. அதை புனரமைக்க 500 மில்லியன் ரூபாய் தேவை என கூறியிருந்தேன். அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

வங்கலை பிரதேசத்தில் விரைவான கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தடுக்க 23 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனை முழுமைப்படுத்த மேலும் 23 மில்லியன் ரூபாய் உடனடியாக தேவை எனவும் கூறியிருந்தேன்.

வடக்கு மாகாணத்தில் பல வருடங்களாக இடமாற்றப் பிரச்சனை உள்ளது. குறிப்பாக வன்னி மாவட்டத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பல ஆசிரியர்கள் யாழில் இருந்து வந்துள்ளார்கள். அவர்கள் 7, 8 வருடம் முடிந்ததும் யாழ் செல்கிறார்கள். இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் கோட்ட முறையில் அதனை மாவட்டங்களில் தெரிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தேன். பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தேன் எனத் தெரிவித்தார்.

Related Posts

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 19, 2025
0

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று (19) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல் இன்று 2025.06.19 இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை...

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

by Thamil
June 19, 2025
0

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்....

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே போதை...

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன்...

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

by Thamil
June 19, 2025
0

இன்று (19) நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ வீதியில் உள்ள ஹல்கிரானோயா பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று குடை சாய்ந்தது. இடம்பெற்ற இவ் விபத்தில்...

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

by Thamil
June 19, 2025
0

வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (19) இடம்பெற்றது. இன்று மாலை 4.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன்...

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் (19) குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி