வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு பெருவிழா இன்று (29.05) பாடாசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து பாரம்பரிய முறைப்படி அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அத்துடன் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களான கிறீஸ் மரம் ஏறுதல், தலையணை சண்டை உட்பட பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்ததுடன், மாணவர்களிற்கான கைவிசேடங்களும் வழங்கப்பட்டது. உற்பத்தி பொருட்சந்தையும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாமன், வவுனியா வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி சசிகுமார் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருத்தனர்.




