• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.!

Mathavi by Mathavi
May 29, 2025
in இலங்கை செய்திகள், கிளிநொச்சி செய்திகள்
0 0
0
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.!
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இளங்குமரன், ரஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா, இராணுவத்தினர், பொலிஸார், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த வகையில் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையமானது கரைச்சி பிரதேச சபையினரிடம் கையளிக்கப்பட்டு இனிவரும் காலங்களில் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் கரைச்சி பிரதேச சபையினரே கையாள்வார்கள் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

அத்துடன் பூநகரி கௌதாரி முனை பகுதியில் உள்ள மணல் திட்டுகள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு முற்று முழுதாக தடை செய்யப்பட்டப்பட்டுள்ளது.

கல்மடுக் குளத்தின் அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாகவும் கல்மடுக் குளத்தின் கீழ்
இயங்கி வரும் மணல் விற்பனை நிலையத்தினை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக இயங்கி வருமாயின் கல்மடுக்குளம் காணாமல் போய்விடும் எனும் காரணத்தால் இந்த மணல் விற்பனை நிலையம் மூடப்படுகிறது.

இந்திய மீனவர்களின் விடயம் தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

கச்சதீவு என்பது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. எனவே எந்த வகையிலும் கச்சதீவை இந்தியாவுக்கு தாரைவாக்க முடியாது எனவும் தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் தேர்தல்கள் வரும் பொழுது கச்சதீவு தேர்தல் காலங்களில் மாத்திரமே கதைப்பார்கள். சட்டத்திலோ அல்லது சர்வதேச சட்டத்திலோ கச்சதீவினை இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கைச் சட்டத்தில் இடம் இல்லை என தெரிவித்தார்.

அத்துடன் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் பொழுது முதல் தடவையாக கைது செய்யப்படுபவர்கள் ஒரு வாரமோ அல்லது ஓரிரு தினங்களிலோ விடுதலை செய்யப்படுகிறார்கள் எனவும் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முற்படுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Related Posts

கற்கோவளம் இராணுவ முகாம் அருகில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம்..!

கற்கோவளம் இராணுவ முகாம் அருகில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம்..!

by Thamil
June 12, 2025
0

யாழ். பருத்தித்துறையில் மனித மண்டையோட்டுடன் கூடிய மனித எலும்பு எச்சங்கள் இன்று (12) அடையாளம் காணப்பட்டுள்ளன. பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம் அருகில்...

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்...

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்..!

by Thamil
June 12, 2025
0

"இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும், மீனவ அமைச்சும் தீவிரமாக இருக்கிறது. கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். எதிர்வரும் 15 ஆம்...

கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை எனும் இரு நூல்களின் அறிமுக விழா.!

கிழக்கின் 100 சிறுகதைகள், கிழக்கின் கவிக்கோர்வை எனும் இரு நூல்களின் அறிமுக விழா.!

by Mathavi
June 12, 2025
0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு - 2 மற்றும் கிழக்கின் கவிக்கோர்வை தொகுப்பு ஆகிய இரு பாரிய நூல்களின் அறிமுக விழா...

வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

by Mathavi
June 12, 2025
0

நிலைபேறான கூட்டுறவு மேம்பாடிற்கான புதிய வழியைத் தொடங்குதல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கிளிநொச்சி...

மண்சரிவினால் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை சேதம்.!

மண்சரிவினால் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை சேதம்.!

by Mathavi
June 12, 2025
0

வட்டவளை - ஆகரவத்தை பிரதான வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் ஹட்டன், டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலை மண்சரிவினால் சேதமாகியுள்ளது. மலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய...

ஏறாவூர் பிரதேச சபை தமிழரசின் வசம்.!

ஏறாவூர் பிரதேச சபை தமிழரசின் வசம்.!

by Mathavi
June 12, 2025
0

ஏறாவூர்ப்பற்று தவிசாளர், பிரதித் தவிசாளர்த் தேர்வு இன்று 12.06.2025 ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் மண்டபத்தில் (செங்கலடியில்)இடம்பெற்றது. அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த கௌரவ முத்துப்பிள்ளை...

Auto Draft

சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சி.ஐ.டி.!

by Mathavi
June 12, 2025
0

வவுனியா சிறைச்சாலைக்கு வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்றையதினம் (12) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இன்று காலை சிறைச்சாலைக்குள் நுழைந்த சி.ஐ.டி குழுவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை...

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவரைப் பதவி நீக்கக் கோரி வழக்கு –  இன்று நீதிமன்றத்தில் பரிசீலனை.!

சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவரைப் பதவி நீக்கக் கோரி வழக்கு – இன்று நீதிமன்றத்தில் பரிசீலனை.!

by Mathavi
June 12, 2025
0

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி