• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home நிகழ்வுகள்

இயேசுவின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையும் வெற்றியும் தருகிறது – ஆயர் ஞானப்பிரகாசம்

Sangeetha by Sangeetha
April 19, 2025
in நிகழ்வுகள்
0 0
0
இயேசுவின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையும் வெற்றியும் தருகிறது – ஆயர் ஞானப்பிரகாசம்
Share on FacebookShare on Twitter

இயேசுவின் உயிர்ப்பு சாவின் மேல் வாழ்வு பெற்றுக் கொண்ட வெற்றியை எடுத்துக் காட்டுகின்றது-மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியைத் தருகிறது. அதாவது நமது பாடுகளின் பின்னால் நமக்கும் உயிர்ப்பு வெற்றி உண்டு என்பதே அச்செய்தி என மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் விடுத்துள்ள உயிர்ப்பு பெருவிழா செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

ஈஸ்டர் பெருவிழா என்பது இயேசுவின் உயிர்ப்பை கொண்டாடும் விழாவாகும். இது கிறிஸ்தவர்களின் உயிர்நாடியான விழாவாகும். தவக்காலம் என்று சொல்லப்படுகின்ற நாற்பது நாட்கள் ஒறுத்தல், தவ முயற்சிகளை மேற்கொண்டு கிறிஸ்தவர்கள் தங்களை ஆன்மீக ரீதியில் ஆயத்தம் செய்து புனித வாரத்திற்குள் நுழைகின்றனர்.

இந்தப் புனித வாரத்தில் வரும் முக்கிய நாட்களான பெரிய வியாழன், பெரிய வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு ஆகியவை கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வில் ஒரு மிக முக்கியமான, புனிதமான நாட்களாகும்.

இயேசுவின் பாடுகள் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை மிகுந்த பக்தி வணக்கத்தோடு இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் நினைவு கூறுகின்றனர். இயேசுவின் பாடுகள் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து ‘பாஸ்கா விழா’ என அழைக்கின்றனர். இயேசுவின் உயிர்ப்பு கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையாகும்.

இயேசுவின் உயிர்ப்பு குறித்து புனித பவுல் குறிப்பிடும் போது, ‘கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொருளற்றதாகி விடும்’ என்கிறார். எனவே கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படையாக, அத்திவாரமாக, ஆணிவேராக இருப்பது இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வாகும். இயேசுவின் உயிர்ப்பில் தான் கிறிஸ்தவம் கட்டப்பட்டுள்ளது.

மனிதனின் அறிவியல் வளர்ச்சி எவ்வளவு உயர்ந்து சென்றாலும் மரணத்திற்குப் பின்னர் மனிதனுக்கு என்ன நடக்கிறது என்பதைக் குறித்து மனித அறிவியல் தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கை அதற்குத் தெளிவான பதிலை தருகிறது.

அப்பத்தில் இயேசுவின் உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இயேசுவின் உயிர்ப்பு சாவின் மேல் வாழ்வு பெற்றுக்கொண்ட வெற்றியை எடுத்துக்காட்டுகின்றது. கிறிஸ்தவ பாரம்பரியத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது சாவின் மேல் இயேசு ஏற்படுத்திய வெற்றியை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பெறக்கூடிய விண்ணக வாழ்வின் நம்பிக்கையை வழங்குகின்றது.

இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியை தருகிறது. அதாவது நமது பாடுகளின் பின்னால் நமக்கும் உயிர்ப்பு, வெற்றி உண்டு என்பதே அச்செய்தி. இயேசுவின் பாடுகள் மரணத்தோடு அவருடைய வாழ்வு முற்றுப் பெறவில்லை. இயேசுவின் சீடர்கள் கூட ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தார்கள்.

நம்பிக்கை இழந்து நின்றார்கள். ஆனால் இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார், வெற்றிவாகை சூடினார். நம்முடைய வாழ்வும் பாடுகள் நிறைந்த வாழ்வுதான். துன்பங்கள், போராட்டங்கள் நிறைந்த வாழ்வுதான்.

ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது, வாழ்க்கையில் விரக்தி அடையக்கூடாது. காரணம் இயேசு தனது துன்பத்தை, சிலுவைப் பாடுகளைக் கடந்து உயிர்ப்பின் வெற்றியை அடைந்தது போல, விண்ணேற்றமடைந்து மகிமை பெற்றதைப் போல, நாமும் வெற்றியை, மகிமையைப் பெறுவோம் என நம்புவதற்கு இயேசுவின் உயிர்ப்பு நமக்கு உறுதிப்பாட்டை தருகிறது.

உங்கள் அனைவருக்கும் எனது உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்!அன்னை மரியாவின் வழியாக மருதமடு அன்னையின் பரிந்துரை ஊடாக உங்கள் அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! என மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

      கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி..!

      by Thamil
      May 28, 2025
      0

      யாழ்.வடமராட்சிக் கிழக்கு - கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. முன்பள்ளியில் மு.ப 10.00 மணியளவில் அவ் முன்பள்ளியின் ஆசிரியர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.மங்கள...

      நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ். மாநகர சபைக்கு காளாஞ்சி கையளிக்கும் வைபவம்.!

      நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ். மாநகர சபைக்கு காளாஞ்சி கையளிக்கும் வைபவம்.!

      by Mathavi
      May 27, 2025
      0

      நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய...

      அரங்கேறியது மரியசீலன் நாட்டுக் கூத்து…!

      அரங்கேறியது மரியசீலன் நாட்டுக் கூத்து…!

      by Mathavi
      May 27, 2025
      0

      யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில் நேற்றையதினம் (26) வடமோடி நாட்டுக்கூத்தான மரியசீலன் நாட்டுக் கூத்து அரங்கேற்றப்பட்டது. இவ் நாட்டுக் கூத்தானது வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு...

      வாழைச்சேனை – பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு – 2025

      வாழைச்சேனை – பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு – 2025

      by Thamil
      May 26, 2025
      0

      திருக்கதவு திறத்தல்30/05/2025 வெள்ளிக்கிழமை திருக்குளிர்த்தி02/06/2025 திங்கட்கிழமை திருச்சடங்கு காலத்தில் அடியவர்கள் ஆச்சார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து தாழையூர்ப்பதி அன்னையவள் கண்ணகி தாயாரின் திருவருட்கடாட்சங்களை பெற்றேகுமாறு வேண்டி...

      மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு விழா

      மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு விழா

      by Sangeetha
      May 26, 2025
      0

      மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் கழக தினம் நேற்று மாலை சிறப்பான முறையில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில்...

      திருகோணமலையில் காணி உரிமை மீதான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு

      திருகோணமலையில் காணி உரிமை மீதான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு

      by Sangeetha
      May 26, 2025
      0

      திருகோணமலை சம்பூர் பகுதியில் சோலார் மின்வலுத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் காணி தொடர்பாகவும் குச்சவெளி வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான ஆவணப்பட...

      திருகோணமலை நிலாவெளி சுற்றுலாப் பிரதேச கடற்கரை சிரமதான நிகழ்வு

      திருகோணமலை நிலாவெளி சுற்றுலாப் பிரதேச கடற்கரை சிரமதான நிகழ்வு

      by Sangeetha
      May 26, 2025
      0

      நிலாவெளி பிரதேச சுற்றுலா கடற்கரைரை சுத்தம் செய்யும் நிகழ்வும் மற்றும் நீருக்கடியில் சுத்தம் செய்யும் நிகழ்வானது இன்று (26) இடம் பெற்றது. குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட...

      செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது

      செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது

      by Sangeetha
      May 26, 2025
      0

      யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய நற்கருணை திருவிழா நேற்று (25)மாலை 5 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில்...

      முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவு கராத்தே விழா நிகழ்வு

      முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கையின் 50 ஆவது ஆண்டு நிறைவு கராத்தே விழா நிகழ்வு

      by Sangeetha
      May 26, 2025
      0

      இலங்கை விளையாட்டுத்துறையின் பதிவு செய்யப்பட்டுள்ள கராத்தே தற்க்காப்பு கலை முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்பேளனம் இந்நிகழ்வை ஏற்ப்பாடு செய்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் (25.05.2025)நேற்று...

      Load More
      Next Post
      சமாதிக்கு எதிராக உயிர்த்த நம்பிக்கை – அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்

      சமாதிக்கு எதிராக உயிர்த்த நம்பிக்கை – அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்

      யாழில் மனைவியை பிரிந்திருந்த குடும்பஸ்தர் நஞ்சருந்தி உயிர் மாய்ப்பு!

      யாழில் மனைவியை பிரிந்திருந்த குடும்பஸ்தர் நஞ்சருந்தி உயிர் மாய்ப்பு!

      கருணா, பிள்ளையானின் வெளியேற்றமே விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்.!

      கருணா, பிள்ளையானின் வெளியேற்றமே விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி