இன்று அதிகாலை வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று வேனில் மோதியதில் விபத்துள்ளாகி உயிரிழந்துள்ளது.
இன்று அதிகாலை 12:30 மணியளவில் நீர்கொழும்பு யாழ்ப்பாண வீதியில் அமைந்துள்ள கல்கமுவ வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று வீதியில் சென்ற HIACE HI ROOF ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
வாகனத்தில் சென்றவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன. ஆகையினால் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிக அவதானத்தோடும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.