முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்ப்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் இன்றைய தினம் 12.03.2025மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.
இவ்வாய்வு கூடத்தில் விஞ்ஞான ஆய்வு கூடம் மாணவர்களின் நவீன கல்வி செயற்பாட்டுக்காக கணினிமையம் மற்றும் நூலகம் அடங்கலாக புதிய கட்டிடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு
வலய கல்வி பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




