வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடல் நடத்தினார்.
ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (05.02.2025) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்திலிருந்து போருக்கு முன்னர் பெருமளவு மரக்கறிகள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் போரின் பின்னர் அவ்வாறான செயற்பாடுகள் முழுமையாக நடைபெறவில்லை என ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் போருக்கு முன்னர் சிமெந்து தொழிற்சாலை, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் இயங்கினாலும் போரின் பின்னர் அவை முழுவீச்சில் இயங்கவில்லை என்றும் இதனால் வடக்கில் வேலையின்னை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பில் உலக வங்கிப் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் உலக வங்கிப் பிரதிநிதிகள் அவதானம் செலுத்தினர். சுற்றுலாத்துறைசார் முதலீட்டுக்கு பலர் தயாராக உள்ளபோதும் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கொழும்பிலிருந்து வடக்குக்கான பயண நேரம் நீண்டதாகக் காணப்படுகின்றமையால் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்புத் தொடர்பிலும் உலக வங்கிப் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் அரச காணிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குடிநீர் மிகப் பிரதான பிரச்சினையாக இருப்பதாகவும் குறிப்பிட்ட ஆளுநர் 2018 – 2019 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் உலக வங்கியின் நிதியுதவியில் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருந்த மிகப்பெரிய திட்டங்கள் துரதிஷ்டவசமாக நடைமுறைப்படுத்தப்படாமல் போனமை தொடர்பிலும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் அரசியல் நிலைமைகள், கௌரவ ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்துக்கான பயணம் தொடர்பிலும் உலக வங்கியினர் கேட்டறிந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் உலக வங்கியின் ஆலோசகர்களுள் ஒருவரான கணேஸ் விக்னராஜா மற்றும் ஆராய்ச்சி ஆய்வாளர்களான உதகிருணி அத்தபத்து, நிரோஷா பெரேரா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழில் மணல் கடத்தி வந்த டிப்பரை வெடி வைத்து பிடித்த பொலிஸார்!
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...