Browsing: இலங்கை செய்திகள்

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் அயலவர் மற்றும் உறவினர்கள் இருவர் மீகொடை பொலிஸாரால்  (16) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மீகொடை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் அயல் வீட்டில் வசிக்கும் இளைஞரொருவரும் சிறுமியின் உறவினர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சந்தேக நபர்கள் மூவரும் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் […]

ராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த   5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்ததுடன், தோப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள்,பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று  வெள்ளிக்கிழமை (16)  விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – கண்டி  பிரதான வீதியில் கொண்டக்கலை பகுதியில் வைத்து லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது குறித்த லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்தனர் என்றும், எனினும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இடத்தில் இதற்கு […]

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியில் வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதிய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது 02 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ள நிலையிலும் இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளன. இதே வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதிய எருமை […]

தேசிய லொத்தர் சபையினால் 2023 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டுக்களின் சூப்பர் பரிசு மற்றும் மில்லியன் பரிசுத் தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் வாகனங்கள் வென்றவர்களுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிதி அமைச்சின் கேட்போர்கூடத்தில்  (16) நடைபெற்றது. இதன்போது, கொவிசெத, மெகா பவர், மெகா பவர் 60 உள்ளிட்ட லொத்தர் சீட்டிழுப்புக்களின் வெற்றியாளர்களுக்கான பணப் பரிசு மற்றும் வாகன பரிசுகள், விற்பனை முகவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசுகள், சான்றிதழ்கள் என்பனவும் […]

  மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி பற்றி தெரிந்தவர்கள் உடன் மட்டு வைத்தியசாலை செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   மேலதிக விபயங்கள் இணைக்கப்படும்.

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை முடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை […]

வாரியப்பொல, பமுனகொட்டுவ பகுதியில், கலுகமுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. கலுகமுவ வீதியில் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாறை டிப்போ அதிகாரிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அல்வா கொடுத்த சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளது. பழுதடைந்த பேரூந்துகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட 400 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் தலைமையில் நடைபெற்றது. அதற்காக அம்பாறை டிப்போவின் NB-5430 எனும் பதிவெண் கொண்ட பேரூந்து திருத்தியமைக்கப்பட தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான உதிரிப்பாகங்கள் கொள்வனவுக்கு 4 […]

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞன் ஒருவர் இன்று (16.02) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடை பயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் வழமை போன்று நேற்று வியாழக் கிழமை (15.02) மாலையும் நகரசபைக்கு வருகை தந்துள்ளார். இதன் போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட […]