28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பைரத திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் சப்பைரத திருவிரழா பக்தி பூர்வமாக இடம் பெற்றது.

மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.

துர்க்கை அம்மன் பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளியாக உள்வீதியுலா வந்து, சப்பைரதத்தில் வீற்றிருந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 04.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் எதிர்வரும் 14.09.2024 அன்று இரதோற்சவமும்,15 09.2024 அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, அன்றையதினம் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையும்.

இதில் பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.


Related posts

உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு வளத்தாப்பிட்டி யில் நடமாடும் வைத்திய சேவை

sumi

தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம் !

User1

கள்ள வாக்களிப்பவருக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்க தடை

User1

Leave a Comment