28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு  குழுவினர் இன்று  (13.09.2024)  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பில்    யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள்  தொடர்பாகவும் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள்   மற்றும் நிறைவுபெற்ற அஞ்சல் வாக்களிப்பின் விபரங்கள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது. 

இச்  சந்திப்பில்  ANFREL  தேர்தல் கண்காணிப்பு குழுவின் சர்வதேச கண்காணிப்பாளர் திரு. ஹசன் மொகமட்  மற்றும் திரு. எஸ். கலாராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

User1

சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும்….!

User1

இலங்கையில் ஒரே இடத்தில் கூடி பாரம்பரிய உணவுகளை கொண்டாடிய தமிழ் மக்கள்!

User1

Leave a Comment