Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரவுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்து வீழ்ச்சி அடைந்ததனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்ச்சியடைய செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை […]

ஈழத்துக் குயில் கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் இன்று கௌரவமளிக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் இன்று பாடசாலைகள் ஆரம்பமாகின. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கில்மிஷா பங்கேற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் கரையொதுங்கிவருகின்றன. இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் சிறுவர் நம்பிக்கை எழுச்சி வாரம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் அனுஷ்டிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் சிறுவர் எழுச்சிவாரத்தின் இறுதி நாள் நேற்றைய தினம் கப்பலேந்திமாதா…

சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தினால் நேற்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன,…

புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.…

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான…

ரத்தினப்புரி – எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு…

சிகை அலங்கார கடைக்குச் சென்று கொண்டிருந்த வேளையில், மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 14 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாகப் பலியாகினான். இந்தச் சம்பவம் நோர்வூட் பொலிஸ்…

யாழ் . பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிசார் இன்று காலை கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸ் நிலையத்தினை விட்டு தப்பியோடிய மாணவன் தனது உயிரைக்…